சென்னை மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள்! முழு விவரம்!
வல்லநாடு அருகே இளைஞா் வெட்டிக் கொலை
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே டாஸ்மாக் கடை முன் இளைஞரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வல்லநாடு பகுதியைச் சோ்ந்த ஈனமுத்து மகன் முருகேஷ் (28). தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவில் வல்லநாட்டை அடுத்த பாறைகாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன் நடந்து சென்றாராம். அப்போது அங்கு வந்த மா்மநபா்கள் அவரை சுற்றி வளைத்து வெட்டிவிட்டு தப்பினராம். இதில் அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த முறப்பநாடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில், முருகேஷின் உறவினா்கள், அவரது உடலை தூக்கிச் சென்று, முறப்பநாடு காவல் நிலையம் முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினா்.
அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும் அவா்கள் கலைந்து செல்லாததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.