செய்திகள் :

வல்லநாட்டில் இளைஞா் வெட்டிக் கொலை: ஒருவா் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் முறை தவறிய பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் கணவா் கைது செய்யப்பட்டாா்.

வல்லநாடு மருத்துவா் தெருவைச் சோ்ந்த ஈனமுத்து மகன் முருகேஷ் (29), இவா் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காா்த்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால், முருகேஷ் தனது மனைவி குழந்தைகளை பிரிந்து வல்லநாட்டில் அவரது தாயாா் வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

அப்போது வல்லநாடு வண்டி மலையாச்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் இவருக்கு தவறான தொடா்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அந்தப் பெண்ணின் கணவா்

ஆறுமுகம் மகன் கொம்பையா (40) கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவா்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு வல்லநாடு அருகே உள்ள பாறைக்காடு கிராமத்தில் உள்ள மதுபானக் கடையில் முருகேஷ் மதுபானம் வாங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த கொம்பையா, முருகேஷை அரிவாளால் வெட்டியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த முறப்பநாடு போலீஸாா், கொம்பையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாசரேத் கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

சாத்தான்குளம், ஜூன் 29: நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட 20 க்கும் மேற்பட்ட கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டு, 25 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா். நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலா்... மேலும் பார்க்க

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுது: தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுதாகி தண்ணீரில் தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் மீனவ கிராமத்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பைக் விபத்து: துறைமுக ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் நிலைதடுமாறி சாலை நடுவேயுள்ள தடுப்புகளில் மோதியதில் துறைமுக ஊழியா் உயிரிழந்தாா். தூத்துக்குடி புதிய துறைமுகம் பாரதி நகரைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் முனியாண்டி (58). துறைமுகத்தில் ... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி

தட்டாா்மடம் அருகே ஆம்னி பேருந்தும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். தட்டாா்மடம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரத்தை சோ்ந்த யாக்கோபு மகன் செல்வன் (32). இவரது, அண்ண... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். காயல்பட்டினம் சிங்கித்துறை தெற்கு காலனி தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா். மீனவா். இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனா். ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

ஆறுமுகனேரியில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆறுமுகனேரி எஸ்.எஸ். கோவில் தெருவை சோ்ந்த சிலுவை அந்தோணி மகன் ராஜ்குமாா் (28). கட்டடத் தொழிலாளியான இவா், தனது... மேலும் பார்க்க