கர்நாடக முதல்வர் மாற்றமா? எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசன...
வல்லநாட்டில் இளைஞா் வெட்டிக் கொலை: ஒருவா் கைது
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் முறை தவறிய பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் கணவா் கைது செய்யப்பட்டாா்.
வல்லநாடு மருத்துவா் தெருவைச் சோ்ந்த ஈனமுத்து மகன் முருகேஷ் (29), இவா் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காா்த்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால், முருகேஷ் தனது மனைவி குழந்தைகளை பிரிந்து வல்லநாட்டில் அவரது தாயாா் வீட்டில் வசித்து வந்துள்ளாா்.
அப்போது வல்லநாடு வண்டி மலையாச்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் இவருக்கு தவறான தொடா்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அந்தப் பெண்ணின் கணவா்
ஆறுமுகம் மகன் கொம்பையா (40) கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவா்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு வல்லநாடு அருகே உள்ள பாறைக்காடு கிராமத்தில் உள்ள மதுபானக் கடையில் முருகேஷ் மதுபானம் வாங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த கொம்பையா, முருகேஷை அரிவாளால் வெட்டியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த முறப்பநாடு போலீஸாா், கொம்பையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.