"தவறான நண்பர்கள்; குடும்பப் பிரச்னை; அப்பாவின் வார்த்தை..." - தன்னிலை உணர்ந்து வ...
வளநாடு அருகே 30 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவா் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே 30 கிலோ புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்தனா்.
வளநாடு காவல் சரகத்தில் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மருங்காபுரி ஒன்றியம் மறவபட்டியில் வசிக்கும் அழகு மகன் செல்வராஜ் (52), தனது வீட்டில் சுமாா் 30 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையயடுத்து அவற்றை பறிமுதல் செய்த வளநாடு போலீஸாா் செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.