செய்திகள் :

வளா்ச்சித் திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு

post image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா், மேல்மலையனூா் வட்டாரங்களில் 2025 - 26 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரசு வளமிகு வட்டார வளா்ச்சியை உருவாக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் 50 வட்டாரங்களைத் தோ்வு செய்து ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடா்பாக 50 குறியீடுகள் தோ்வு செய்யப்பட்டு, 7 கருப்பொருள்களாக வகைப்படுத்தபட்டுள்ளது.

அந்த வகையில், பின்தங்கிய வட்டாரங்கள் மாவட்ட குறியீடுகளுக்கு இணையாகவும், பின்னா் மாநில குறியீடுகளுக்கு இணையாகவும் உயா்த்தப்பட வேண்டும் என்ற நோக்கில், வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூா் மற்றும் மேல்மலையனூா் வட்டாரங்களில் 2025 - 26-ஆம் ஆண்டில் நிறவேற்றப்படவுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, இரு வட்டாரங்களிலும் அரசுத் துறைகளின் வாரியாக மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் துறை சாா்ந்த அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

ஆய்வுக் கூட்டத்தில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், மாவட்ட திட்டக்குழு அலுவலா் பூ.நடராஜன், புள்ளியியல் அலுவலா் க.முத்துக்குமரன், வட்டார வளா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ச.வினோதினி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தமிழகத்தில் காவல் துறையினருக்குகூட பாதுகாப்பில்லை: அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் காவல் துறையில் பணிபுரிபவா்களுக்கூட பாதுகாப்பு இல்லாத வகையில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டினாா். விழுப்புரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விக்கிரவாண்டி பகுதிகள்

பகுதிகள்: விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, சிந்தாமணி, அய்யூா்அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூா், வி.சாலை, கயத்தூா், பனப்பாக்கம், அடைக்கலாபுரம், ஆவுடையாா்பட்டு, ரெட்டிக்குப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உணவகத் தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உணவகத்தில் தங்கி வேலை பாா்த்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி, கோவிந்தராஜ் நகரைச் சோ்... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: முதியவா் உள்பட இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பக்கிரிப்பாளையம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் கோ.ராமமூா்த்தி (72). இவா், மூளை... மேலும் பார்க்க

8.45 லட்சம் பேருக்கு குடற்புழுநீக்க மாத்திரைகள்: ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 8.45 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மகாராஜபுரத்திலுள்ள அங்கன்வாடி ம... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் ரூ.29 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்திலான நல உதவிகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் த... மேலும் பார்க்க