செய்திகள் :

வளையல் விற்பனை முதல் மதம் மாற்றம் செய்தது வரை... கிராமத் தலைவரின் வங்கிக் கணக்கில் ரூ.106 கோடி!

post image

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் சட்டவிரோத மற்றும் மதமாற்ற நடவடிக்கை இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் சங்கூர்பாபா என்ற ஜலாலுதீன் மற்றும் நஸ்ரின் என்பவரும் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரும் சேர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கியோர், ஏழைகள், ஆதரவற்றோருக்கு நிதி அளிப்பதாகவும், கணவரை இழந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாகவும் மிரட்டல் விடுத்தும் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால், அவர்கள் இருவரையும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவரும் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபடவிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

ஜலாலுதீனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணயில், நேபாளத்தின் எல்லையில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் பிறந்து, சைக்கிளில் வளையல் விற்று, கிராமத் தலைவராகவும் ஜலாலுதீன் இருந்து வந்தது தெரிய வந்தது.

மேலும், அவருக்கு 40 வங்கிக் கணக்குகளில் ரூ.106 கோடி இருக்கிறது. இவையனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளது.

அவருக்கு எப்படி திடீரென இவ்வளவு பணம் கிடைத்தது. ஒரு பெரிய சொகுசு பங்களாவின் ஒரு பகுதியில் அவரது குடும்பத்தினரும், மற்றொரு பகுதியில் அவரின் ஆதரவாளர்கள் தங்க வைக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அந்தக் கட்டடமானது சட்டவிரோதமானது எனக் கண்டறியப்பட்ட நிலையில், அதுவும் இடிக்கப்பட்டு விட்டது.

மதம் மாற்றப்பட்டவர்களுக்கு பணம் அளிக்கப்பட்டதா? அவை சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ED registers money laundering case in U.P. religious conversion racket

கர்நாடகத்தில் மாரடைப்பு மரணங்கள்: மருத்துவமனைகளில் குவியும் மக்கள்!

கர்நாடகத்தில் மாரடைப்பால் அதிகம் பேர் மரணமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் 40 நாள்களில் 23 பேர் மாரடைப... மேலும் பார்க்க

குஜராத்: பாலம் இடிந்து விழுந்ததில் 15 ஆக உயர்ந்த பலி!

குஜராத்தின் வதோதராவில் 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா கூறுகையில், இந்த நிலையில்,... மேலும் பார்க்க

அவசரநிலை, இந்திரா காந்தியை விமர்சித்த சசி தரூர்!

அவசரநிலை காலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திருவனந்தபுரம் மக... மேலும் பார்க்க

மனைவி மீது சந்தேகம்! குழந்தைக்கு டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட முடியாது

மும்பை: கணவருக்கு, தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், விதிவிலக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகு... மேலும் பார்க்க

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க