செய்திகள் :

வளையல் விற்பனை முதல் மதம் மாற்றம் செய்தது வரை... கிராமத் தலைவரின் வங்கிக் கணக்கில் ரூ.106 கோடி!

post image

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் சட்டவிரோத மற்றும் மதமாற்ற நடவடிக்கை இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் சங்கூர்பாபா என்ற ஜலாலுதீன் மற்றும் நஸ்ரின் என்பவரும் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரும் சேர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கியோர், ஏழைகள், ஆதரவற்றோருக்கு நிதி அளிப்பதாகவும், கணவரை இழந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாகவும் மிரட்டல் விடுத்தும் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால், அவர்கள் இருவரையும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவரும் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபடவிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

ஜலாலுதீனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணயில், நேபாளத்தின் எல்லையில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் பிறந்து, சைக்கிளில் வளையல் விற்று, கிராமத் தலைவராகவும் ஜலாலுதீன் இருந்து வந்தது தெரிய வந்தது.

மேலும், அவருக்கு 40 வங்கிக் கணக்குகளில் ரூ.106 கோடி இருக்கிறது. இவையனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளது.

அவருக்கு எப்படி திடீரென இவ்வளவு பணம் கிடைத்தது. ஒரு பெரிய சொகுசு பங்களாவின் ஒரு பகுதியில் அவரது குடும்பத்தினரும், மற்றொரு பகுதியில் அவரின் ஆதரவாளர்கள் தங்க வைக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அந்தக் கட்டடமானது சட்டவிரோதமானது எனக் கண்டறியப்பட்ட நிலையில், அதுவும் இடிக்கப்பட்டு விட்டது.

மதம் மாற்றப்பட்டவர்களுக்கு பணம் அளிக்கப்பட்டதா? அவை சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ED registers money laundering case in U.P. religious conversion racket

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்

புது தில்லி: இந்தியாவில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.நாட்டின் குடியுரிமை ஆவணம் தொடர்பான வழக்கு உச்ச... மேலும் பார்க்க

ரூ.2 ஆயிரம் கடனுக்காக இளைஞர் கொலை: தில்லியில் அதிர்ச்சி!

தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் ரூ. 2 ஆயிரம் கடன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 23 வயது நபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், ஃபர்தீன்... மேலும் பார்க்க

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநில... மேலும் பார்க்க

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றி... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் சில இ... மேலும் பார்க்க