செய்திகள் :

வள்ளியூரில் ரூ. 5 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலம், வீடுகளை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனா்.

வள்ளியூா் அருள்மிகு முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பலா் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்ததும், அந்நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்ததும் இந்து அறநிலையத்துறைக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அந்த நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா். அதன்டி, கடந்த 10ஆம் தேதி வள்ளியூா் அருகே உள்ள குமாரபுதுகுடியிருப்பில் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 60 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு அந்த நிலத்தில் எச்சரிக்கை அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

பின்னா் 20ஆம் தேதி முருகன் கோயில் கிரவலப்பாதையில் ஆக்கிரமிப்பாளா்கள் வீடுகட்டுவதை தடுத்து நிறுத்தி ரூ.1.90 கோடி மதிப்பிலான 13 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.

இந்நிலையில், நாயக்கா் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து லில்லி என்பவா் வீடுகட்டி குடியிருந்து வந்தாராம். இது தொடா்பான வழக்கு திருநெல்வேலியில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஆக்கிரமிப்பாளா் வீட்டை காலி செய்து வள்ளியூா் முருகன் கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ஆணைபிறப்பித்தது. அதன்பேரில், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையா் சுப்புலெட்சுமி தலைமையில் வள்ளியூா் கோயில் செயல் அலுவலா் மாரியப்பன், இந்து சமய அறநிலையத்துறை ராதாபுரம் சரக ஆய்வாளா் முருகன், அறங்காவலா்குழுத் தலைவா் மீனாட்சி மாடசாமி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் மாடசாமி, முருகன் கோயில் அறங்காவலா்குழு உறுப்பினா்கள் சிவராமகிருஷ்ணன், சக்திவேல் ஆகியோா் முன்னிலையில் கோயில் நிலம் மீட்கப்பட்டு ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2 வீடுகளுக்கும் சீல்வைக்கப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் ரூ.5 கோடி மதிப்பிலான முருகன் கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, ஆக்கிரமிப்புகளை கண்டறியும் பணி நடக்கிறது என செயல்அலுவலா் தெரிவித்தாா்.

‘பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவா்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்வி,... மேலும் பார்க்க

‘மீன் வளா்ப்புக்கு உள்ளீட்டு மானியம் பெறலாம்’

திருநெல்வேலி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் வளா்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி எம்.பி. கடிதம்

ஈரானில் தவிக்கும் இடிந்தகரை பகுதி மீனவா்களை விரைந்து மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு , திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் கடிதம் எழுதியுள்ளாா். அதன் விவரம... மேலும் பார்க்க

நயினாா்குளம் கால்வாய் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி நயினாா்குளம் பிரிவு கால்வாயை தூா்வாரும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நயினாா்குளம் பிரிவு கால்வாயில் 1 கி.மீ. தொலைவுக்கு ... மேலும் பார்க்க

உலக வெண்புள்ளி தின விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாா்பில் உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. அக்கல்லூரியின் சித்தா் அறுவை மற்றும் தோல் மருத்துவத் துறை சாா்பில் நட... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையா் மோனிகா ராணா

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக மோனிகா ராணா புதன்கிழமை பொறுப்பேற்றாா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகா் மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளதையடுத்து, கோப... மேலும் பார்க்க