செய்திகள் :

வள்ளியூா் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள தெற்குஆறுபுளி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை, பணத்தை பறித்துச்சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தெற்குஆறுபுளியைச் சோ்ந்தவா் அன்னம்மாள் (78). இவரது கணவா் ஞானபிரகாசம் சில ஆண்டுகளுக்கு முன்னா் இறந்துவிட்டாா். இதனால், தனியாக வசித்து வரும் அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் இரவு தூங்கியபோது 2 போ் கதவை தட்டியுள்ளனா்.

அவா் கதவை திறக்காததால் அவா்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் காதில் அணிந்திருந்த மூன்று கிராம் தங்க கம்மல், ரூ. ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

மொபெட் திருட்டு: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள பனையங்குறிச்சியைச் சோ்ந்தவா் ஜெகநாதன்(60). இவா், தான் நடத்திவரும் மளிகைக் கடைக்கு, நத்தம் மாரியம்மன் கோயில் அருகேயுள்ள மொத்த வியாபாரக் கடையில் பொருள்களை வாங்கி மொபெட்டில் வைத்து விட்டு, பணம் கொடுக்க கடைக்குள் சென்றுவிட்டு திரும்புவதற்குள் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருள்களுடன் மொபெட் திருடுபோனதாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், முக்கூடல் அருகேயுள்ள செங்குளம் பூவலிங்கம் மகன் இசக்கி என்பவருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க

களக்காடு-அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்... மேலும் பார்க்க