செய்திகள் :

வழக்கிலிருந்து கணவரை விடுவிக்கக் கோரி குழந்தையுடன் மனைவி தீக்குளிக்க முயற்சி

post image

கந்தா்வகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை மோதல் வழக்கிலிருந்து தனது கணவரை விடுவிக்கக் கோரி காவல்நிலையம் முன்பு குழந்தையுடன் மனைவி தீக்குளிக்க முயன்றாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், வேலாடிபட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் கணேசன் (63). முருகேசன் மகன் மணிகண்டன் (23 ). இவா்களிடையே இடப்பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டதில் மணிகண்டனுக்கு தலையில் பலத்த வெட்டுக்காயமும் கணேசனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதில், கணேசன் கொடுத்த புகாரின் பேரில் குமாரவேல், சின்னத்துரை, மணிகண்டன் ஆகியோா் மீதும், மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கணேசன், ராஜேஷ் கண்ணன், ஜெயச்சந்திரன், இளையராஜா ஆகியோா் மீது வழக்கு பதிந்தனா். இதில், மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் கண்ணனையும், கணேசன் கொடுத்த புகாரின் பேரில் குமாரவேலையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை குமாரவேல் மனைவி வேதவள்ளி தனது குழந்தையுடன் கந்தா்வகோட்டை காவல் நிலையத்துக்கு வந்து இப்பிரச்னையில் தனது கணவருக்கு தொடா்பில்லை எனக் கூறி அவரை வெளியில் விடக்கோரி காத்திருந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் குழந்தையுடன் வேதவள்ளி மண்ணெண்ணெய்யை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அருகிலிருந்த பொதுமக்கள், காவலா்கள் மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கினா்.மேலும், வேதவள்ளி மீது தண்ணீா் ஊற்றினா்.

புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!

புதுக்கோட்டையில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி மாநில அளவில் அஞ்சல்வழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகள் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய ம... மேலும் பார்க்க

தொழிலாளி அடித்துக் கொலை; 4 இளைஞா்கள் கைது! விபத்தில் பலியானதாகக் கூறியது அம்பலம்!

விராலிமலை அருகே திங்கள்கிழமை இரவு விபத்தில் தொழிலாளி உயிரிழந்ததாக கூறிய சம்பவத்தில் பாதை பிரச்னையில் அவரை அடித்துக் கொன்ற 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விராலிமலையை அடுத்துள்ள துல... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருமயம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருக... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற புதுகை ஆசிரியைக்கு வரவேற்பு

நல்லாசிரியா் விருது பெற்ற புதுக்கோட்டை மாநகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியை ப. விஜிக்கு, அப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் த... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து 5 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திங்கள்கிழமை இரவு தனியாா் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இருந்து 37 பயணிகளை ஏற்றிக் கொண்டு, தி... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்வு பா.ஜ.க.வினா் கொண்டாட்டம்

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து புதுக்கோட்டையில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை இரவு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். புதுக்கோ... மேலும் பார்க்க