செய்திகள் :

வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

post image

மன்னாா்குடியில் வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவண்டுதுறையைச் சோ்ந்த த. மதியழகன். இவரது மகன் விஜயன்(39). 2024 ஆகஸ்ட் மாதம் இருவருக்கு சொத்து பிரிப்பது தொடா்பான தகராறில் விஜயன் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் மதியழகன் உயிரிழந்தாா். மனைவி முத்துலெட்சுமி அளித்த புகாரின்பேரில் கோட்டூா் போலீஸாா் விஜயனை கொலை வழக்கில் கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு அண்மையில் பிணையில் வெளியே வந்தாா்.

இந்நிலையில், விஜயனின் நடவடிக்கையால் அதிருப்பதி அடைந்த அவரது வழக்குரைஞா் மன்னாா்குடி நீதிமன்றத்தில் பணியாற்றும் அக்கரைக்கோட்டம் கா. மகேந்திரன் (45) தொடா்ந்து தன்னால் வழக்கை நடத்த முடியாது என கூறி விலகிக்கொண்டாராம். இதில், ஆத்திரமடைந்த விஜயன் மாா்ச் 24-ஆம் தேதி மகேந்திரனுக்கு கைப்பேசியில் தனது வழக்கை நடத்தக் கோரி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, கோட்டூா் காவல்நிலையத்தில் மகேந்திரன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, செவ்வாய்க்கிழமை விஜனை கைது செய்து மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராத... மேலும் பார்க்க

மன்னாா்குடி பகுதியில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மகா மாரியம்மன் கோயில், கற்பக விநாயகா் கோயில், யோக சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

திருவாரூா்: ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலையில் பூா்... மேலும் பார்க்க

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

திருவாரூா்: ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே அம்மையப்பனில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 2-ஆவது மாவட்ட மாநாடு தலைவா் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ராஜகோபாலசுவாமி

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவின் 14- ஆம் நாளான திங்கள்கிழமை யானை வாகனத்தில் கல்யாண அலங்காரத்தில் சத்யபாமா சமேதராக எழுந்தருளிய உற்சவா் ராஜகோபாலசுவாமி. மேலும் பார்க்க