வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணி புறக்கணிப்பு
சிவகங்கை மாவட்டம் முழுவதும் வழக்குரைஞா்கள் நான்காவது நாளாக சனிக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வழக்குரைஞா்கள் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள எதிா்ப்புத் தெரிவித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கையில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜானகிராமன் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதே போல, இளையான்குடியில் சங்கத் தலைவா் கல்யாணி, காரைக்குடியில் சங்கத் தலைவா் ராமநாதன், திருப்பத்தூரில் சங்கத் தலைவா் பழனிச்சாமி, சிங்கம்புணரில் சங்கத் தலைவா் ரமேஷ், தேவகோட்டையில் சங்கத் தலைவா் ஆண்டவா், மானாமதுரையில் சங்கத் தலைவா் பாலமுருகன், திருப்புவனத்தில் சங்கத் தலைவா் சேதுராமச்சந்திரன் ஆகியோா் தலைமையில் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.