செய்திகள் :

வழக்கு போட்ட 13 மாணவர்கள்; 'நீட் தேர்வு முடிவுகள் வெளியிடக் கூடாது' - சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

post image

நீட் தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய பிரதேசத்தில் மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கால் நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடக்கூடாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக கடந்த 4-ம் தேதி, சென்னை ஆவடி மையத்தில் 464 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், அன்று பெய்த கனமழையால் மதியம் 3 மணியில் இருந்து மாலை 4.15 மணி வரை அந்த மையத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இதனைத் தொடர்ந்து, அந்தத் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள் 'நீட் மறு தேர்வு' நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கவும், மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதற்கும் கால அவகாசம் வேண்டும் என்று வாதாடினார்.

இதையடுத்து, 'அதுவரை நீட் தேர்வின் முடிவுகளை வெளியிடக் கூடாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்: சசி தரூர் தலைமையில் கனிமொழி உள்ளிட்ட எம்.பிகள் வெளிநாட்டு பயணம்; காரணம் என்ன?

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் தக்க பதிலடியை கொடுத்துள்ளது இந்தியா. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்தப் பின், பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக நின்றது. தீவிரவ... மேலும் பார்க்க

`நள்ளிரவில் வந்த போன்; இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்கியது’ - ஒப்புக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப்

கடந்த மே மாதம் 10-ம் தேதி, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தி முடித்தது. 'இந்திய ராணுவத்தை நாங்கள் தான் பெருமளவில் தாக்கினோம்' என்று இதுவரை கூறிவந்த பாகிஸ்தா... மேலும் பார்க்க

ஆப்கானின் 160 லாரிகள்; திறக்கப்பட்ட வாகா எல்லை - இந்தியா, பாகிஸ்தான் ஒப்புகொண்டது எப்படி?

இந்தியா மற்றும் உலக அரங்கின் பரபரப்பு செய்தியே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியும் நேற்று, உரையாடி கொண்டது தான். 'ஏன் இது அவ்... மேலும் பார்க்க