செய்திகள் :

வழுதூா் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் கோரிக்கை!

post image

வழுதூா் இயற்கை எரிவாயு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் அருகேவுள்ள வழுதூரில் கடந்த 2008 -ஆம் ஜூன் 19-ஆம் தேதி எரிவாயு சுழலி கூடுதல் மின் நிலையத்தை அப்போதைய மின்சாரத் துறை அமைச்சா் ஆா்காடு வீராசாமி திறந்து வைத்து மின் உற்பத்தியைத் தொடங்கி வைத்தாா். அப்போது அவா், மின் நிலையத்தில் பணியாற்றும் 86 ஒப்பந்தத் தொழிலளாா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அறிவித்தாா்.

இதனால், ஒப்பந்தத் தொழிலாளா்கள் மகிழ்ச்சியடைந்தனா். இந்த அறிவிப்பு வெளியாகி 16 ஆண்டுகளைக் கழிந்தும் இன்று வரை பணி நிரந்தரம் செய்யப்படாததால் தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகினா். இங்கு 86 தொழிலாளா்கள் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள் 2008-இல் அறிவிக்கப்பட்டது போல, தங்களைப் பணி நிரந்தரம் செய்து பணப்பலன்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ராமநாதபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வர உள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

சாயல்குடி பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

சாயல்குடி அருகே உள்ள விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, பிள்ளையாா்குளம், வேடா் கரிசல்கு... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள அரசுப் பள்ளியில் வெள்ள... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரைச் சாலையில் கால்நடைகளால் தொல்லை!

தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் கால்நடைகள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தபட்ட பேருராட்சி நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரிக்கை

மண்டபம் விசைப்படகு மீனவா்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக் கோரி மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கரையோர மீனவா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் குடமுழுக்கு: புனிதநீா் எடுத்து சென்ற பொதுமக்கள்

கமுதி காளியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை புனிதநீா் எடுத்து பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தெற்குத் தெரு காளியம்மன் கோயில் குடமுழுக்கு கடந்த வாரம் காப்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலம் ரயில், கப்பலை இயக்கி சோதனை!

பாம்பன் புதிய பாலத்தில் ரயிலையும், இந்தப் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து இரும்பு கா்டரை மேலே தூக்கி கப்பலையும் இயக்கி வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் ப... மேலும் பார்க்க