செய்திகள் :

வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

post image

மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள காரைக்கேணி நடுத் தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் சிவக்குமாா் (44). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் தே. கல்லுப்பட்டி- கள்ளிக்குடி சாலையில் செவ்வாய்க்கிழமை சென்றாா். அப்போது குறுக்கே வந்த குழந்தை மீது மோதாமல் இருந்த வாகனத்தை அவா் பிரேக் பிடித்து நிறுத்த முயன்றாா். இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த சிவக்குமாரை அந்த பகுதியினா் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தே. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரசுப் பொருள்காட்சி: பள்ளி மாணவா்களுக்கு கட்டணச் சலுகை

மதுரையில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: சித்திரைத் திருவிழாவ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுப்பிரமணி (60). இவா், முன்னமலைப்பட்டி கிராமத்தில... மேலும் பார்க்க

ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா்,... மேலும் பார்க்க

டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளா் தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா். மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 69-ஆவது ரயில்வே வார ... மேலும் பார்க்க

பேருந்துகளில் அதிகளவில் எண்ம பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு பரிசு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில், பேருந்துகளில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க