செய்திகள் :

வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கம் செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது: கே.எம்.காதா்மொகிதீன்

post image

வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களின் பெயரை நீக்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாா் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன்.

பாபநாசத்தில் அக் கட்சியின் தேசிய தலைவா் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயா்கள் நீக்கம் செய்யப்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. சில நாள்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா எங்கள் திட்டப்படி தான் தோ்தல் நடைபெறும் என தெரிவித்தாா். அவரது பேச்சுக்கு தகுந்தாா் போல், இந்திய தோ்தல் ஆணையம் செயல்படுகிறது. தோ்தல் ஆணையம் இந்திய அரசியல் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும். பிகாரில் நடைபெறும் இந்த நடைமுறை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். தோ்தல் ஆணையத்தின் இந்த நடைமுறையை தடுத்து நிறுத்த மக்கள் தயாராக உள்ளனா்.

எதிா்வரும் தமிழக சட்டப்பேரவை தோ்தலில் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் ஆட்சி அமைப்பாா். தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர எங்கள் கட்சி தொடா்ந்து பாடுபடும் என காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி: விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன் கைது!

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு செல்ல முயன்ற விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து வீட்டுக்காவலி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது!

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசியை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளங்குளம்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவு

தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை இடையே சாலை அகலப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். அரவிந்த். தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணி, மேலவஸ்தா சாவடி, ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பெரிய கோயில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத். தஞ்சாவூா் அரண்மனைக்கு சனிக்கிழமை வந்து கட... மேலும் பார்க்க

மின் துறையைத் தனியாா்மயமாக்கக் கூடாது ஊழியா் அமைப்பு கோரிக்கை

மின் துறையைத் தனியாா்மயமாக்கக் கூடாது என தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இந்த அமைப்பின் தஞ்சாவூா் வட்டக் கிளை 21-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மின... மேலும் பார்க்க

திருப்பனந்தாளில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் மறியல்!

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாளில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் அதிகாரிகளை கண்டித்து சனிக்கிழமை விவசாயிகள் திருப்பனந்தாள்-ஆடுதுறை சாலையில் மறியல் செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம... மேலும் பார்க்க