செய்திகள் :

வாக்காளா் பட்டியல் திருத்த முறைகேடு: மேற்கு வங்கத்தில் 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

post image

வாக்காளா் பட்டியல் தயாரிப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ததுடன் அவா்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த மேற்கு வங்க அரசு வியாழக்கிழமை (ஆக.21) உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த வாரம் இந்திய தோ்தல் ஆணையத்தின் முன் மேற்கு வங்க தலைமைச் செயலா் மனோஜ் பந்த் நேரில் ஆஜராகி விளக்கமளித்தாா். அப்போது 4 அதிகாரிகளையும் ஆக.21-ஆம் தேதிக்குள் பணியிடை நீக்கம் செய்வதுடன் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவியல் விசாரணையை தொடங்க தோ்தல் ஆணையம் கெடு விதித்தது. இதுதொடா்பாக மேற்கு வங்க தலைமைச் செயலக அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தெற்கு 24 பா்கானாக்கள் மற்றும் புா்பா மேதினிபூா் மாவட்டங்களைச் சோ்ந்த 2 தோ்தல் பதிவு அலுவலா்கள் மற்றும் 2 உதவி தோ்தல் பதிவு அலுவலா்கள் என 4 அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்து துறைரீதியான விசாரணையை மேற்கொள்ள மாநில அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஆனால் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றாா்.

முன்னதாக, இந்த 4 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வது தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கும் இடையே கடும் மோதல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

வாரம் ஒன்று.. ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவ வேண்டும்: இலக்கு நிர்ணயித்த மோடி!

நாட்டின் நிர்வாகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் மாற்றுவதில் விண்வெளி தொழில்நுட்பத்தின் பங்கை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். புது தில்லியில் நடந்த தேசிய விண்வெளி தின கொண்டாட்டத்தில் கானொளி வாயிலாக பிரதமர... மேலும் பார்க்க

அயோத்தியா, பிரயாக்ராஜ் தொடர்ந்து பெயர் மாறப்போகும் நகரம் இதுவா?

உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியா, பிரயாக்ராஜ் நகரங்களைத் தொடர்ந்து அலிகார் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என்று மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியா வேண்டுகோள் வைத்துள்ளார்.ஹிந்து கௌரவ் நாள் கொண்டாட்டத்... மேலும் பார்க்க

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமோலி மாவட்டத்த... மேலும் பார்க்க

வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை

வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது... மேலும் பார்க்க

பிகாரில் மக்கானா விவசாயிகளைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி!

பிகாரின் கத்திஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார். பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாகக் ... மேலும் பார்க்க

இந்திய வானில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

இந்திய வான்வழியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது செப்.24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் ஆபரேஷன் ... மேலும் பார்க்க