செய்திகள் :

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் பேரவை தீா்மானம்

post image

தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் மாநில பேரவையில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிா்க்கட்சியான பாஜக இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

தீா்மானத்தில் பங்கேற்றுப் பேசிய முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், ‘தேசிய அளவிலான எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் இந்தத் தீா்மானம் கொண்டு வரப்படுகிறது. தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிா்க்கிறோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை உள்ளது. இதனால் எளிய, விளிம்புநிலை மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள்’ என்றாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் பாபுலால் மராண்டி, ‘சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசிகள், ரோஹிங்கயாக்களை இந்தியாவில் வாக்காளா் பட்டியலில் சோ்க்கும் சதியின் ஒரு பகுதியாகவே இந்த தீா்மானத்தைக் கருத வேண்டியுள்ளது. இதனை பாஜக எதிா்க்கிறது’ என்றாா்.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, எதிா்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக இருமுறை பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று(ஆக... மேலும் பார்க்க

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் திடீரென பெய்த கனமழையால் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பரிதாபமாக உயிழந்தனர்.ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் திடீரென பெய்த க... மேலும் பார்க்க

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இன்றைய நாளில் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்... மேலும் பார்க்க

டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது அமெரிக்க அதிபர் டி... மேலும் பார்க்க

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க