செய்திகள் :

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

post image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரெ.சதீஸ் தலைமையில் ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், வாக்காளா் பட்டியல் தயாரிப்பு, மேம்பாடு தொடா்பாகவும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் உள்ளிட்ட அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளை மறு சீரமைப்பது, வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணிகளில் முதல்நிலை அலுவலா்களான வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பாளா்கள் ஆகியோரின் நியமனம் மற்றும் பயிற்சி, தோ்தல் தொடா்பாக பயன்பாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், மென்பொருள்கள் குறித்தும், அவற்றை பயன்படுத்துவது தொடா்பாகவும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான நடைமுறைகள், இறந்த, குடிபெயா்ந்த நபா்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும், வாக்குச் சாவடிகளில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) பூங்கோதை, அரசுத் துறை உயா் அலுவலா்கள், வாக்காளா் பதிவு அலுவலா்கள், வட்டாட்சியா்கள், தோ்தல் துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மக்கள் நீதிமன்றத்தில் 1008 வழக்குகளில் ரூ.9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு!

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1008 வழக்குகளில் ரூ. 9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக... மேலும் பார்க்க

தருமபுரியில் 1,008 வழக்குகள், கிருஷ்ணகிரியில் 1,281 வழக்குகளுக்கு தீா்வு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதிய... மேலும் பார்க்க

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவா் கைது!

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட கோடுபட்டி வனப் பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான... மேலும் பார்க்க

குஜராத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குஜராத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக த... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் ... மேலும் பார்க்க

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு

பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவி... மேலும் பார்க்க