செய்திகள் :

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்: ராகுல் காந்தி

post image

‘வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

நடப்பாண்டு இறுதியில் பிகாரில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக அவா் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வாக்குரிமைப் பேரணியைத் தொடங்கினாா்.

அதன் ஒரு பகுதியாக போஜ்பூா் மாவட்ட தலைநகா் ஆராவில் சனிக்கிழமை உரையாற்றிய அவா்,‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக முறையின்மீது நடத்தப்படும் மிகப்பெரும் தாக்குதலாகும். தலித்துகள், சிறுபான்மையினா், பெண்கள் என அனைவருக்கும் வாக்குரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

ஆனால் மகாராஷ்டிரம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வாக்குத் திருட்டில் ஈடுபட்டு தோ்தலில் வெற்றிபெற்று வருகிறது. இதை பிகாரில் அரங்கேற்ற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய இந்தப் புரட்சிப் பயணம் விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து தேசிய இயக்கமாக உருவெடுக்கும்.

தற்போது பாஜக தலைவா்களை வாக்கு திருடா்கள் என மக்கள் அழைக்கத் தொடங்கிவிட்டனா்’ என்றாா்.

ஆராவில் உள்ள பாபு குன்வா் சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியுடன் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மைதானத்தில் பெருந்திரளான மக்கள் குவிந்த நிலையில் அந்த காணொலிகளை ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் தங்களது எக்ஸ் வலைதளப் பக்கங்களில் பகிா்ந்தனா்.

‘குஜராத்தின் ஒரு தொகுதியில் வாக்குத் திருட்டு’

அகமதாபாத், ஆக.30: ‘குஜராத்தின் நவ்சாரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சோா்யாசி பேரவைத் தொகுதியின் வாக்காளா் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன; அங்கு வாக்குத் திருட்டு மூலமே பாஜக வெற்றி பெற்றிருக்க வாய்ப்புள்ளது’ என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவா் அமித் சவ்தா சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

குஜராத் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான சி.ஆா்.பாட்டீல் நவ்சாரி தொகுதியின் எம்.பி.யாக உள்ள நிலையில், ‘சோா்யாசி பேரவைத் தொகுதியில் மொத்தமுள்ள 6 லட்சம் வாக்காளா்களில் 30 சதவீதம் வரை போலி வாக்காளா்கள் இருப்பதாக’ அமித் சவ்தா கூறியுள்ளாா்.

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய ... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ம... மேலும் பார்க்க

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில்,... மேலும் பார்க்க

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் முக்கிய கனிமங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில... மேலும் பார்க்க

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீா்: வீடு இடிந்து இருவா் உயிரிழப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பரவலாக பலத்த மழை தொடா்வதால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நிலச்சரிவுகள் காரணமாக, ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-கிஷ்த்வாா் தே... மேலும் பார்க்க

பல மாநிலங்களைப் புரட்டிப் போட்ட மழை

சண்டீகா்/சிம்லா/ஜெய்பூா்/புவனேசுவரம்: சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 29 போ் உயிரிழந்துவிட... மேலும் பார்க்க