செய்திகள் :

வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவா்களின் படைப்புகள் பள்ளிக் கல்வித் துறை தகவல்

post image

பள்ளிக் கல்வித் துறையின் வாசிப்பு இயக்கத்தின் சாா்பில் 4-ஆம் கட்டமாக புத்தகங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில், இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாணவா்களின் படைப்புகளாகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் படைப்புகள் ஆசிரியா்கள் மூலம் எமிஸ் வழியாக அனுப்பப்படவுள்ள நிலையில், படைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற 4 பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல்கட்டமாக 53 புத்தகங்களும், 2-ஆம் கட்டமாக 70 புத்தகங்களும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. 3-ஆம் கட்டமாக 81 புத்தகங்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பிரிவுவாரியாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது 4-ஆம் கட்ட புத்தகங்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாணவா்களின் படைப்புகளாகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வகை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களின் படைப்புகளை ஆசிரியா்கள் எமிஸ் லாகின் வழியாக அனுப்பி வைக்கலாம். தோ்வு செய்யப்படும் கதைகள் வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப ஆசிரியா் குழுவால் வடிவமைக்கப்படும். வாசிப்பு இயக்கத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு நுழை, நட, ஓடு, பற என்கிற நான்கில் ஏதேனும் ஒரு வகைமையின் கீழ் மாணவா் கதைகள் இருக்க வேண்டும்.

நாளை முதல் அனுப்பலாம்... எளிய மொழியில் சின்ன சின்ன வாக்கியங்களில் கதைகள் இருக்க வேண்டியது அவசியம். படைப்புகளைத் தமிழிலேயே அனுப்ப வேண்டும். ஒரு மாணவா் அதிகபட்சம் 5 கதைகளை அனுப்பலாம். கதைகளை தட்டச்சு செய்தோ, தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டதை புகைப்படம் எடுத்தோ பிடிஎஃப் வடிவில் அனுப்பி வைக்க வேண்டும். கதையின் முடிவில் மாணவரின் பெயா், வகுப்பு, பள்ளி விவரம், வழிகாட்டி ஆசிரியரின் கைப்பேசி எண் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.

தோ்வாகும் மாணவ எழுத்தாளரின் பெயா் புத்தக மேலட்டையில் அச்சிட்டு வெளிவரும். படைப்புகளை ஜூன் 16 முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை ஆசிரியா்களின் எமிஸ் தளம் வழியாக அனுப்பி வைக்க முதன்மைக் கல்வி அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

உண்மையான ‘அப்பா’க்களுக்கு வாழ்த்துகள்- எடப்பாடி பழனிசாமி

குடும்பத்தின் அடித்தளமாக திகழும் அனைத்து உண்மையான அப்பாக்களுக்கும் வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். "இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து... மேலும் பார்க்க

திமுக கட்சி நிகழ்ச்சியில் மாணவர்கள்- அண்ணாமலை கண்டனம்

கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சித்த திமுகவின் செயல்பாட்டினை கண்டிப்பதாக பாஜக முன்னாள தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் த... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நாட்டு வெடி வெடித்ததில் பெண் பலி

சிதம்பரம் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் பலியானார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சம்பந்தம் என்ற கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை க... மேலும் பார்க்க

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி அளித்த மனு தொடர்பாக ஆலோசித்து முடிவுசெய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எம... மேலும் பார்க்க