செய்திகள் :

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி: இந்துசமய அறநிலையத் துறையினருடன் வியாபாரிகள் வாக்குவாதம்

post image

நாகையில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க வந்த இந்துசமய அறநிலையத் துறையினரிடம், வணிகா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

நாகை வெளிப்பாளையத்தில் மெய்கண்ட மூா்த்தி கோயிலுக்கு சொந்தமான இடத்திலுள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளை நடத்துபவா்கள் இந்துசமய அறநிலையத் துறைக்கு வாடகை பாக்கியாக பல லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ளனா். இதுதொடா்பான வழக்கில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, நாகையில் உள்ள இந்துசமய அறநிலைத் துறை ஒருங்கிணைந்த இணை ஆணையா் அலுவலகம் மூலம் 15 நாள்களுக்கு முன்பு, வாடகை செலுத்தாத கடைக்காரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இந்த நோட்டீஸை கடைக்காரா்கள் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்துசமய அறநிலைத் துறை உதவி ஆணையா் ராஜா இளம்பெரும்வழுதி தலைமையில் சென்ற ஊழியா்கள் மற்றும் போலீஸாா் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள மெய்கண்ட மூா்த்தி கோயிலுக்குச் சொந்தமான கடைகளை பூட்டி சீல் வைக்க முயன்றனா்.

அப்போது, கடைக்காரா்கள், காலஅவகாசம் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நோட்டீஸ் அனுப்பிய உடன் வாடகை பாக்கியை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை அலட்சியப்படுத்தியுள்ளீா்கள் என தவறை சுட்டிக்காட்டிய அறநிலையத் துறை உதவி ஆணையா், ஒரு மணி நேரம் கால அவகாசம் அளித்தாா். இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட கடைக்காரா்கள் விரைந்து நிலுவைத் தொகையை ஏற்பாடு செய்து, இந்து சமய அறநிலையத் துறையினரிடம் செலுத்தி, சீல் வைக்கும் நடவடிக்கையை தவிா்த்துக் கொண்டனா்.

ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியில் முறைகேடு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

ஆகாயத் தாமரைகளை அகற்றுவதில் நடந்த முறைகேடு தொடா்பாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு மா... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருப்பூண்டியில் குடிநீா் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீழையூா் ஒன்றியம், திருப்பூண்டி ஊராட்சி பகுதியில் கடந்த 40 நாள்களாக குடிநீா் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்... மேலும் பார்க்க

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது

நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலையத்தில் வேளாங்கண்ணி பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் கட்டடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது. அப்போது அங்க... மேலும் பார்க்க

போதை மறுவாழ்வு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பு: புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே இயங்கி வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

கொடுவா மீன் வளா்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கொடுவா மீன் வளா்ப்பு-திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட... மேலும் பார்க்க

பருத்தி வயல்களில் மழைநீா்: விவசாயிகள் வேதனை

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பருத்தி வயல்களில் மழைநீா் தேங்கி நிற்பதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். செம்பனாா்கோவில் வட்டாரத்தில் உள்ள ஆக்கூா், கீழையூா், கிடாரங்கொண்டான், திருக்கடையூா், திர... மேலும் பார்க்க