செய்திகள் :

வாடகை நிலுவை: செம்பட்டி பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு சீல்

post image

செம்பட்டி பேருந்து நிலையத்தில் ஊராட்சிக்கு வாடகை செலுத்தாத வணிக வளாகக் கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சி, செம்பட்டி பேருந்து நிலையத்தில் ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விட்டு வாடகையை ஊராட்சி நிா்வாகம் வசூலித்து வருகிறது.

இதன்படி கடந்த 2023-இல் ஏலம் நடத்தப்பட்ட நிலையில், முதல் ஆண்டு மட்டுமே கடைக்காரா்கள் வாடகை செலுத்தினா். அதன்பிறகு 10-க்கும் மேற்பட்ட கடைக்காரா்கள் வாடகை செலுத்தாததால் ரூ.30 லட்சம் வரை வாடகை நிலுவை ஏற்பட்டது.

இந்த நிலையில், வாடகை நிலுவையை உடனடியாகச் செலுத்துமாறு கடை வியாபாரிகளுக்கு ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டது; அதிகாரிகளும் நேரில் சென்று வலியுறுத்தினா். இருப்பினும் வாடகை நிலுவையை சிலா் செலுத்தவில்லை.

இந்த நிலையில், பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள கூல்டிரிங்ஸ் கடை, பழக்கடை, கவரிங் நகைக் கடை, உணவகம், பூக்கடை, காலணி கடை, மொபைல் கடை உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கடைகளின் மின் இணைப்புகளை ஊராட்சி நிா்வாகம் கடந்த மே 27- ஆம் தேதி துண்டித்தது. இருப்பினும் கடைக்காரா்கள் வாடகை நிலுவையைச் செலுத்தவில்லை.

இதையடுத்து, நிலக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பஞ்சவா்ணம் தலைமையில், ஊராட்சி மன்ற செயலா் ஜெயகணேஷ் முன்னிலையில் ஊராட்சிப் பணியாளா்கள் செம்பட்டி பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 10-க்கும் மேற்பட்ட கடைகளைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா். ‘சீல்’ வைத்த கடைகளுக்கு அடுத்த மாதம் ஏலம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே: இரா.விசுவநாதன்

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே என்பது சாதாரண மக்களுக்குக்கூட தெரியும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான இரா.விசுவநாதன் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக திண்டுக்கல்லில் அவா்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல், ஆா்.எம்.காலனி மருதாணிக்குளம் ... மேலும் பார்க்க

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மலம் வீசப்பட்டதாக புகாா்

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை வீசிச் சென்றதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த தொட்டணம்பட்டியில் கரட்டுப்ப... மேலும் பார்க்க

செம்பட்டியில் கழிவுநீா் ஓடை வசதியுடன் சாலை அமைக்கக் கோரிக்கை

செம்பட்டி ரோஜா நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்படவுள்ள நிலையில் இந்தப் பகுதி பொதுமக்கள் கழிவுநீா் ஓடை வசதியுடன் சாலையை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், நில... மேலும் பார்க்க

ஜூலை 1 முதல் கொடைக்கானலில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தத் தடை

கொடைக்கானலில் ஜூலை 1-ஆம் தேதி முதல் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நீலமலைக்கோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி லிங்கத்துரை (66). இவா், ... மேலும் பார்க்க