செய்திகள் :

வாடகை வீட்டை காலி செய்யாத வழக்கறிஞர்: 4 மாத சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்! - என்ன நடந்தது?

post image

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. மோகன்தாஸ் (54). இவர் வசித்து வந்த வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததாக நீதிமன்றத்தில் வீட்டு உரிமையாளர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் இருதரப்பையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மே 31, 2025-க்குள் வீட்டை காலிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் கொடுத்தக் காலக்கெடுவைக் கடந்தும் வழக்கறிஞர் மோகன்தாஸ் வீட்டை காலிசெய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தீர்ப்பு
தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இந்த நிலையில், வீட்டு உரிமையாளர் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் இருக்கும் வழக்கறிஞர் தொடர்ந்து வீட்டு உரிமையாளருக்கு தொல்லைக் கொடுத்து வந்ததும், வீட்டு உரிமையாளர் மீது ஏராளமான வழக்குகளைத் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல், 1989-ம் ஆண்டு பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகளைத் தடுக்கும்) சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்த விசாரணைக்குப் பிறகு நீதிபதி கடுமையானக் கோபத்துடன், ``வாடகை வீட்டில் இவ்வளவு காலமாக இருந்துக்கொண்டு வீட்டு உரிமையாளரைக் கொடுமை படுத்தியது, நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்தை அவமதித்தது உள்ளிட்டக் காரணங்களால் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேல் முறையீடு செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்படாது. சிறையிலிருந்து மேல் முறையீடு செய்துகொள்ளலாம்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இத்தகைய கடுமையான தவறான நடத்தையை, இந்த நீதிமன்றம் உறுதியாக எதிர்க்கவில்லை என்றால், அத்தகைய நேர்மையற்ற வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் சாதகமானதற்கு சமமாகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலும், அவரது நடத்தை ஒரு வழக்கறிஞருக்குத் தகுதியற்றது என்பதால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்" என உத்தரவிட்டிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

நெல்லை: `ஆதரவற்ற பாட்டியின் வீட்டை மீட்டுக்கொடுத்த காவல்துறை' - நன்றி கடிதத்தால் நெகிழ்ந்த போலீஸார்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி. 70 வயதான இம்மூதாட்டி ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார். இவரது ஆதரவற்ற நிலையை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், ரொக்கமாகவும் காசோலை மூலம... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றம் விதித்த நிபந்தனை என்ன?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் வைத்திருந்ததாக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா இதே வழக்கில் கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

தேனி: லஞ்சம், முறைகேடான சொத்து... அரசு டாக்டருக்கு எதிராக மனு; பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தேனி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் சொப்ன ஜோதி, தன் கணவருடன் சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன... மேலும் பார்க்க

பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்கி குஜராத் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கறிஞரின் இந்த செயலை 'மூர்க்கத்தனம்' என ... மேலும் பார்க்க

JEE: தேர்வறையில் பல்லி, தொழில்நுட்ப கோளாறு; வழக்கு தொடர்ந்த மாணவர் - அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

தேர்வறையில் பல்லியைக் காண நேரிட்டதால் தேர்வில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தேர்வு எழுத இயலாமல் தவித்ததாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவரொருவர் வழக்கு தொ... மேலும் பார்க்க

Thug Life : `இந்த நிலைமை இப்படியே நீடித்தால்..!’ - கர்நாடக அரசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்

கன்னட மொழி பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு எதிராக அவர் நடித்த தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ச... மேலும் பார்க்க