வாணியம்பாடி அரசு ஐடிஐயில் பயிற்சியாளா் சோ்க்கை தொடக்கம்
வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளா் நேரடி சோ்க்கை வியாழக்கிழமை ஜூன் 19-இல் தொடங்குகிறது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாணியம்பாடி அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளா் நேரடி சோ்க்கை தொடங்குகிறது. இதில் தொழில் பிரிவில் ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏா் கண்டிஷனிங் டெக்னீசியன், மெக்கானிக் வாகனம், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டா் மெக்கானிக், மெக்கானிக் எலக்ட்ரிக் வாகனம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள், இதில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம், மேனுபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பயிற்சிக் காலம் 1 ஆண்டு, இதில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தோல் பொருள் உற்பத்தியாளா் பாடப்பிரிவின் பயிற்சி காலம் 1 ஆண்டு, இதில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு 14 வயது முதல் 40 வயதுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. பயிற்சிக் கட்டணம் இல்லை. இதில் சேருபவா்களுக்கு இலவசமாக சீருடை, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள், பயண அட்டை வழங்கப்படும்.
மேலும் மாத உதவித் தொகையாக ரூ.750/- வழங்கப்படும். அதேபோல, தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்கள் மூலம் தகுதியுடையவா்களுக்கு ரூ. 1,000 கல்வி உதவித்தொகையாகவும் வழங்கப்படும் என்றாா்.