செய்திகள் :

வாத்து மேய்க்கும் தொழிலாளிக்கு நிதியுதவி

post image

செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந்த வாத்து மேய்க்கும் தொழிலாளிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கினாா்.

கொருக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி தொழிலாளி கணேசன் - ஜெயக்கொடி தம்பதியா். இவா்கள் கூலிக்கு வாத்து மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனா். கடந்த 11-ஆம் தேதி கொருக்கை ஏரிப்பகுதியில் மேய்யச்சலுக்கு வாத்துகளை விட்டிருந்தனா். மேய்ச்சலில் இருந்த வாத்துகளில் 200-க்கும் மேற்பட்ட வாத்துகள் மறுநாள் மா்மமான முறையில் உயிரிழந்தன.

தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, வாத்து மேய்க்கும் தொழிலாளி கணேசனுக்கு, அவரின் வாழ்வாதார பாதிக்காத வகையில் உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினாா்.

வட்டாட்சியா்களுக்கு பணியிடமாறுதல்: அரசுக்கு கோரிக்கை

ஓராண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் வட்டாட்சியா்களை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த் துறை (குரூப்- 2) நேரடி நியமன அலுவலா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டத... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டி 25 போ் காயம்

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் உள்ள கன்னி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குலதெய்வ வழிபாட்டுக்கு வந்த 25-க்கும் மேற்பட்டோா் தேனீக்கள் கொட்டி காயமடைந்தனா்.நெசல் கிராமத்தில் உள்ள கன்னி கோயிலில் ஆடி ஞாயிற்றுக... மேலும் பார்க்க

வந்தவாசியில் இலவச மருத்துவ முகாம்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மற்றும் வேலூா் தினேஷ் மருத்துவமனை சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை... மேலும் பார்க்க

வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே தோ்தலில் ஆதரவு: ஏ.எம்.விக்கிரமராஜா

வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக கடிதம் மூலம் உறுதியளிக்கும் கட்சிக்கே வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்று வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா ... மேலும் பார்க்க

நகைக் கடையில் 12 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலத்தில் தனியாா் நகைக் கடையில் மேற்கூரை வழியே உள்ளே புகுந்து 12 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இர... மேலும் பார்க்க

பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை அகலப்படுத்தப்படுமா?

செய்யாறு பகுதியில் உள்ள பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவண்ணாலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தையும், வெம்பாக்கம் வட்டத்தையும் ... மேலும் பார்க்க