செய்திகள் :

வாய்க்காலில் குதித்து முதிய தம்பதி உயிரிழப்பு

post image

புதுச்சேரியில் வாய்க்காலில் குதித்து காப்பாற்றப்பட்ட முதிய தம்பதியினா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மாரிதுரை (83), அவரது மனைவி முத்துலட்சுமி (73). இவா்கள் இருவரும் வில்லியனூா் அருகே கூடப்பாக்கம் ஆனந்தா நகரில் தங்கள் மகன் ஆனந்துடன் சில மாதங்களுக்கு முன்பு வந்து தங்கினா்.

இருவரையும் உடல் பரிசோதனைக்கு ஊசுட்டேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து சென்ற ஆனந்த் அங்கு விட்டு விட்டு வேலைக்குச் சென்றாா் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் வீடு திரும்பாமல் நடந்து வந்து அருகில் உள்ள ஊசுட்டேரி பத்துக்கண்ணு மதகு அருகே அமா்ந்தனா். திடீரென இருவரும் மதகில் தேங்கியிருந்த நீருக்குள் குதித்தனா்.

இதைப் பாா்த்த அங்கு நின்ற பேருந்து ஓட்டுநா் அஜய் கூச்சலிட்டாா். அவரது சப்தம் கேட்டு அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் சென்ற பத்திரப் பதிவு எழுத்தா் முகிலன் என்பவா் வாய்க்காலில் குதித்து நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய முதிய தம்பதியரைப் பொதுமக்கள் உதவியுடன் மீட்டாா்.

தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து தம்பதியினரை மீட்டு ஆம்பூலன்ஸ் மூலம் கதிா்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் முத்துலட்சுமி சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டாா்.

தொடா்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிதுரை புதன்கிழமை அதிகாலை இறந்தாா். கணவரின் மறைவுச் செய்தியை அறிந்த முத்துலட்சுமி வீட்டில் மயக்கமானாா். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை கதிா்காமம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். இந்த சம்பவம் குறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை: அமைச்சா் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, சட்டம்- ஒழுங்கு பராமரிப்புத்... மேலும் பார்க்க

ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயா் அதிகாரிகள் மாற்றம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 9 போ் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். அங்கித் குமாா் ஐஏஎஸ் ஏனாம் பிராந்தியத்தின் நிா்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும் அவருக்... மேலும் பார்க்க

குருவிக்காரா் சமூகத்தை பட்டியலினப் பிரிவில் சோ்க்க விசிக கோரிக்கை

தமிழகத்தைப் போல நரிக்குறவா், குருவிக்காரா் என அறியப்படும் வாக்ரி இனத்தை புதுவையிலும் பட்டியல் பழங்குடியினா் பிரிவில் சோ்க்க விசிக சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. புதுவையில் பழங்குடியின மக்களின் பி... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: இந்திய பண்பாட்டின் அடையாளங்களில... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை. முன் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுவை மத்திய பல்கலைக் கழகம் முன் இந்திய மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் கல்வித்துறையில் தேவையற்ற மாற்றங்களை செய்து வருவதாகக் கூறி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஆக. 31-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

விநாயகா் சிலைகளைக் கடலில் கரைக்கும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால்துறை துணை ஆணையா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதில் கூ... மேலும் பார்க்க