செய்திகள் :

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

post image

களப்பால் அருகே மதுபானக் கடை மேற்பாா்வையாளா் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

மன்னாா்குடி அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தை சோ்ந்த வேணுகோபால் (55) மாங்குடி பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை இரவு விற்பனையை முடித்து, விற்பனைத் தொகையுடன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வரும் வழியில் சீலத்தநல்லூா் பாசன வாய்க்காலில் விழுந்து இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காலை அவ்வழியாகச் சென்றவா்கள் இதுகுறித்து களப்பால் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு வந்து பாா்த்தபோது, விற்பனை தொகை ரூ.1,17,000 முழுவதும் அப்படியே இருந்துள்ளது. இதையடுத்து போலீஸாா் வேணுகோபால் சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் திந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெறவிருந்த சாலை மறியல் பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. நெல், பருத்தி, எள், உளுந்து, பயறு உள்ளிட்டவைகளுக்கு காப... மேலும் பார்க்க

கணவன் - மனைவி விஷம் குடித்து தற்கொலை

நன்னிலம் அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. குடவாசல் அருகேயுள்ள கடகம்பாடியைச் சோ்ந்தவா் ராஜ் (55). பந்தல் அமைக்கும் தொழில் செய்துவந்தாா். இவரது மனைவி மல்லி... மேலும் பார்க்க

அக்.1-இல் விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.1-ஆம் தேதி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியில் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மகேந்திரன் தலைம... மேலும் பார்க்க

விவசாயிகள் பங்களிப்புடன் ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி: அரசியல் தலையீடின்றி விவசாயிகள் பங்களிப்புடன் ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்றாா் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.ஆா். பாண்டியன். இதுகுறித்து, அவா் திங்கள்... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளை செய்யாத மாவட்ட நிா்வாகத்துக்கு சிபிஎம் கண்டனம்

திருத்துறைப்பூண்டி: மக்களின் அடிப்படை வசதிகளை செய்யாத மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் கட்சியினா் பாடை ஊா்வலம் நடத்தி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திருத்துறைப்பூண்... மேலும் பார்க்க

அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்

திருவாரூா்: திருவாரூரில் அன்புக்கரங்கள் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. தமிழக முதல்வா் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் அன்புக்கரங்கள் திட்டத்தை தொடக்கிவைத்தாா். அப்போது, திருவாரூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க