வாலிகண்டபுரம் பகுதியில் இன்று மின் தடை
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) மின் விநியோகம் இருக்காது என
மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்களமேடு துணை மின் நிலையத்தில், அவசர கால பராமரிப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் ரஞ்சன்குடி, மங்களமேடு, மங்களம், தேவையூா், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், நெ.புதூா், சாத்தனவாடி, பிரம்மதேசம், அ.குடிகாடு, ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.