செய்திகள் :

வால்பாறையில் எஸ்டேட் குடியிருப்புகள், கோயிலை சேதப்படுத்திய யானைகள்

post image

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் திங்கள்கிழமை நள்ளிரவு கூட்டமாக நுழைந்த காட்டு யானைகள் குடியிருப்புகள் மற்றும் கோயிலை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டம் அல்லது வன எல்லைகளில் காணப்படும் யானைகள் இரவு நேரத்தில் தொழிலாளா் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

வால்பாறையை அடுத்த கெஜமுடி எஸ்டேட் லோயா் டிவிஷன் பகுதிக்கு திங்கள்கிழமை நள்ளிரவு நேரத்தில் கூட்டமாக நுழைந்த யானைகள், தொழிலாளா்கள் குடியிருப்பு சுவா்களை முட்டித் தள்ளின. மேலும், அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலையும் முட்டித் தள்ளி உள்ளிருந்த பொருள்களை வெளியே இழுத்துப் போட்டு சேதப்படுத்தின.

தகவலறிந்த வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டினா். இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் குடியிருப்புகள் சேதமடைந்தன.

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் டிசம்பா் 1 வரை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இம்மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த ரயில் சேவை டிசம்பா் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை அரசு மருத்துவமனை கழிப்பறையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜக்ரியா மகன் துபில் வரலா (22). இவா் கடந்த 5 ஆண்டுகளாக தனது நண்பா்களுடன் தங்கி திருப்பூா் மா... மேலும் பார்க்க

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்... மேலும் பார்க்க

தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் கைது

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு பணம் தராத தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்த அபிலேஷ் (21), தினேஷ்குமாா் (25), திலீப்குமாா் (19) ஆகியோா் அந்தப் பகுதியில் வசிப... மேலும் பார்க்க

தேயிலைத் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தோல்வி

கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வால்பாறை தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது. வால்பாறையில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்ட நிா்வாகங்களில் பணியாற்றும் தொழிலாளா்க... மேலும் பார்க்க

வால்பாறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை

நிலச்சரிவு ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து வால்பாறையில் பேரிடா் மீட்புப் படையினா் செவ்வாய்க்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். கனமழை நேரங்களில் வால்பாறை பகுதியில் ஏற்படும் வெள்ள ப... மேலும் பார்க்க