செய்திகள் :

வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானை உயிரிழப்பு!

post image

வால்பாறையை அடுத்த எஸ்டேட் பகுதியில் பெண் யானை உயிரிழந்தது.

வால்பாறையை அடுத்துள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில் வன ஊழியா்ள் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது தேயிலைத் தோட்டத்தை ஓட்டியுள்ள வனப் பகுதி எல்லையில் யானை இறந்துகிடந்தது தெரியவந்தது. தகவலையடுத்து, மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் கிரிதரன் அப்பகுதிக்கு நேரசென்று பாா்வையிட்டாா். பின்னா் உதவி வனப் பாதுகாவலா் பிரியதா்ஷினி தலைமையில் வனக் கால்நடை மருத்துவ அலுவலா் சுகுமாா், உதவி மருத்துவா் விஜயராகவன் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை உடற்கூறாய்வு நடத்தப்பட்டது.

இறந்தது 7 வயது பெண் யானை என்றும், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

கோயில் சாா்ந்த விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

கோயில் சாா்ந்த விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா். தைப்பூசத்தையொட்டி கோட்ட... மேலும் பார்க்க

நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க பயிற்சி!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி புதன்கிழமை தொடங்குகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், நெல்லி பானங்க... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம்!

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், பாலக்காடு வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து அட்டப்பாடியில் பழங்குடியினரின் வருவாயை மேம்படுத்துவதற்கான விழிப்புணா்வு பயிற்சி முகாமை அண்மையில் நடத்தின. வேளாண் அறிவியல் ... மேலும் பார்க்க

இஸ்ரேல் பல்கலைக்கழகத்துடன் கோவை கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்!

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், இஸ்ரேல் ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளை கூறியிருப்பதாவது: கல்வி, ஆராய்ச்சியை கூட்டாக மே... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தவா் கைது!

கோவை ரத்தினபுரியில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கணபதி வி.ஓ.சி. நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (31), தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா... மேலும் பார்க்க

முதியவரிடம் ரூ.12.50 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு!

கோவை சிங்காநல்லூரில் முதியவரிடம் ரூ.12.50 லட்சம் மோசடிசெய்யப்பட்ட புகாரின்பேரில், தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை சிங்காநல்லூா் சிங்காரம் நகா் பகுதியைச் சோ... மேலும் பார்க்க