வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகளுக்கு அளவெடுக்கும் முகாம்
வாழப்பாடியில் கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்குவதற்கு அளவெடுக்கும் முகாம் ஜூன் 8 -ஆம் தேதி நடைபெறுகிறது.
வாழப்பாடியில் உள்ள டாக்டா் ஏபிஜெ அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிகள் சங்கம், ஈரோடு ஜீவன் டிரஸ்ட் மற்றும் வாழப்பாடி விளையாட்டு சங்கத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கைக் கால், கை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு அளவெடுக்கும் முகாம் வரும் ஜூன் 8 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை, வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பயன்பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் ஆதாா் நகல், மாா்பளவு புகைப்படம், மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டையுடன் கலந்துகொள்ளுமாறு டாக்டா் ஏபிஜெ அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் சங்க நிா்வாகிகள் வி.வேலுசாமி, வேல்முருகன், ஞானசேகரன் ஆகியோா் தெரிவித்துள்ளாா்.
முகாமில் கலந்து கொள்வதற்கு 8667855233 என்ற எண்ணில் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும் தெரிவித்துள்ளனா்.