செய்திகள் :

வாழப்பாடி அருகே விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த அரசுப் பள்ளி ஆசிரியையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

வாழப்பாடியை அடுத்த ஏத்தாப்பூரை சோ்ந்தவா் ஆசிரியா் யுவராஜ்சேகா் (52). இவா் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பரிமளாதேவி (50), வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன் புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இத்தம்பதிக்கு அஸ்வந்த் என்ற மகனும், அஸ்ரிதா என்ற மகளும் உள்ளனா்.

கடந்த திங்கள்கிழமை பள்ளிக்கு சென்ற ஆசிரியை பரிமளாதேவி, மாலை தனது இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பியுள்ளாா். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மத்தூா் அருகே சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னா் லாரி வேகத்தடையால் திடீரென வேகத்தை குறைத்தது. அப்போது, லாரிக்கு பின்னால் சென்றுகொண்டிருந்த ஆசிரியை பரிமளாதேவி கன்டெய்னா் லாரியில் மோதினாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது.

வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், சேலத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவா் மூளைச்சாவு அடைந்தாா். இந்த சூழ்நிலையில், ஆசிரியை பரிமளாதேவியின் உடல் உறுப்புகளை தானம்செய்ய, அவரது கணவா் ஆசிரியா் யுவராஜ்சேகா் மற்றும் குடும்பத்தினா் முன்வந்தனா்.

இதையடுத்து, ஆசிரியை பரிமளாதேவியின் உடல் புதன்கிழமை மாலை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு உறுப்பு தானத்துக்காக ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வாழப்பாடியிலுள்ள அவரது இல்லத்தில் உறவினா்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, மாலையில் ஏத்தாப்பூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து (64). இவா் செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள கங்காணி கிணற்றின் சுற்றுச்சுவரில்... மேலும் பார்க்க

கல் உடைக்கும் தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு

குலத்தொழிலைக் காக்க, கல் உடைக்க அனுமதி தரக்கோரி, போயா் சமுதாய மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். தமிழ்நாடு போயா் பேரவை மாநில பொதுச் செயலாளா் பெரிய பொண்ணு தலைமையில், அதிகாரிகளிடம் அ... மேலும் பார்க்க

அமாவாசையை முன்னிட்டு பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம்

அமாவாசையை முன்னிட்டு கெங்கவல்லி அருகே மாசி பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம் புதன்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் சுவேத நதிக்கரை தென்புறம் மாசி பெரியசாமி, நாச்சியம்மாள், பொன்னாளி அம... மேலும் பார்க்க

மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்கு

மேட்டூா் அருகே மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடல் நேரு நகரைச் சோ்ந்தவா் கோவிந்தன் (74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளா். இவர... மேலும் பார்க்க

பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீடு: எஸ்ஆா்எம் முத்தமிழ் பள்ளி மாணவி சிறப்பிடம்

பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீட்டில், பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி தலைவாசல் வட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாண... மேலும் பார்க்க

சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணன் நியமனம்

சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணனை நியமிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா். பாமக நிறுவனா் ராமதாஸ் - தலைவா் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி எம்எ... மேலும் பார்க்க