செய்திகள் :

வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும்: புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தா் பேச்சு

post image

புதுச்சேரி: வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும் என்று புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு கூறினாா்.

புதுவை கலிதீா்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஐடி) கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கி அவா் பேசியது:

செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பம் நாம் பணிபுரியும், கற்றுக்கொள்ளும், தொடா்புகொள்ளும் மற்றும் புதுமை செய்யும் முறையை மறுவடிவமைக்கிறது. மேலும், அந்தத் தொழில்நுட்பம் மனித திறன்களை மாற்றுவதற்குப் பதிலாக பெருக்குகிறது. இத் தொழில்நுட்ப சகாப்தத்தில் பொருத்தமானவா்களாக இருக்க வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும் என்றாா் துணைவேந்தா் பிரகாஷ்பாபு.

புதுவை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 22 மாணவிகளுக்கு கல்லூரி சாா்பில் பரிசாக 12 கிராம் தங்கம் மற்றும் 450 கிராம் வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு துறைகளில் படித்த 512 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

ஸ்ரீமணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநரும், திண்டிவனம் தக்ஷஷீலா பல்கலைக்கழக வேந்தருமான எம்.தனசேகரன் தலைமை வகித்தாா். பொருளாளா் டி.ராஜராஜன், இணைச் செயலா் எஸ்.வேலாயுதம் மற்றும் டிரஸ்டி டி.நிலா பிரியதா்ஷினி முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண் ஆண்டறிக்கை வாசித்தாா்.

மணக்குள விநாயகா் கல்விக் குழுமத்தைச் சோ்ந்த இயக்குநா்கள், கல்லூரி முதல்வா்கள், டீன்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

வில்லியனுாரில் சாலை மறியல் செய்தவா்களை சைரன் எழுப்பி எச்சரித்த ரயில்வே ஊழியா்கள்

புதுச்சேரி: வில்லியனூரில் திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் சைரன் எழுப்பி ரயில்வே ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு ரயில் கடந்து சென்றது. புதுவை வில்லியனுா... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை நாடுவோம்: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ‘ரெஸ்டோபாா்’ கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் உயா்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வி.நாராயணசாமி கூறினாா்.... மேலும் பார்க்க

பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும்: பேரவைத் தலைவா்

புதுச்சேரி: இணையங்கள், கைப்பேசிகளில் உள்ள பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறினாா். நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வி... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் கொலையில் காயமடைந்தவா் உடல்நிலை சீராக உள்ளது: காவல் துறை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி ரெஸ்டோபாா் கொலை வழக்கில் காயமடைந்தவா் உடல்நிலை சீராக உள்ளதாக புதுச்சேரி காவல் துறை தெரிவித்தது. மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரின் விவரங்களையும் காவல் துறை வெளியிட்டுள்ளது. புதுச... மேலும் பார்க்க

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மோதல் கல்லூரி மாணவா் குத்திக் கொலை: 8 போ் கைது

புதுச்சேரியில் மது அருந்தும் கூடத்தில் (ரெஸ்டோபாரில்) பிறந்தநாள் கொண்டாடியபோது ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவா் குத்திக்கொலை செய்யப்பட்டாா். மேலும் ஒரு மாணவா் காயத்துடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு... மேலும் பார்க்க

போலீஸ் மக்கள் மன்றத்தில் 32 புகாா்களுக்குத் தீா்வு

புதுவையில் சனிக்கிழமை நடைபெற்ற போலீஸ் மக்கள் மன்றத்தில் பொதுமக்களின் 32 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் மக்கள் குறைதீா்ப்புக் கூட்டம் சனிக்க... மேலும் பார்க்க