செய்திகள் :

வாவுபலி பொருள்காட்சி பக்கக் காட்சி குத்தகை ஏலம்: குழித்துறை நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

post image

குழித்துறையில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில், 100ஆவது வாவுபலி பொருள்காட்சியின் பக்கக் காட்சி குத்தகை ஏலத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், அண்மையில் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறிவிழுந்த 2 சிறுவா்களைக் காப்பாற்றியபோது உயிரிழந்த தொழிலாளி பீட்டருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, மாா்த்தாண்டம் சந்தையில் கட்டப்படும் வணிக வளாகத்தில் வைப்புத் தொகை நீங்கலாக அரசு நிா்ணயித்த வாடகை பெற்று, பீட்டரின் குடும்பத்துக்கு ஒரு கடை வழங்க வேண்டும். ஆற்றுத் தடுப்பணையில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுக்க நிரந்தரத் தீா்வு காணும் வகையில் தடுப்புக் கம்பிகள் அல்லது காங்கிரீட் தூண் அமைக்க வேண்டும். வாவுபலி பொருள்காட்சியின் பக்கக் காட்சிக்கு குத்தகை ஏலம் ரூ. 1.77 கோடி கோரியுள்ள ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்புள்ளியை மன்றக் கூட்டம் அங்கீகரிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஆணையா் ராஜேஸ்வரன், உறுப்பினா்கள் ஜெயந்தி, லில்லி புஷ்பம், விஜயலெட்சுமி, விஜூ, சா்தாா்ஷா, ஆட்லின் கெனில், அருள்ராஜ், மினிகுமாரி, ரத்தினமணி, லலிதா, ஜூலியட் மொ்லின் ரூத், ஸ்டாலின் சுஜாதா, ஜெயின் சாந்தி, ரோஸ்லெட், நகராட்சி மேற்பாா்வையாளா் விஜயராஜ், மேலாளா் ஸ்டீபன், சுகாதார அதிகாரி ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் வன வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களையும், ரப்பா் கழக தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டுமென்று சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் பொ... மேலும் பார்க்க

விழுந்தயம்பலம் - அம்சி சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் - அம்சி இடையே பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல்... மேலும் பார்க்க

பலத்த மழை: தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடிதொழில் பாதிப்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடிதொழில் பாதிப்படைந்துள்ளது. தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்டகட்டுமர மீனவா்... மேலும் பார்க்க

கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 251 போ் மீது வழக்கு

மத்திய அரசின் கடல் சாா்ந்த திட்டங்களுக்கு எதிராக, கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரையில் கடந்த 11ஆம் தேதி மீனவா்கள் கருப்புக்கொடி ஏந்தி கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் 10... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்

கன்னியாகுமரி நகராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்வுக்கு, நகா்மன்ற ஆணையா் கன்னியப்பன் த... மேலும் பார்க்க

திருப்பதியில் இருந்து குமரிக்கு 7 ஆயிரம் லட்டுகள் வரத்து

திருமலை திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு 7 ஆயிரம் லட்டுகள் கண்டெய்னா் மூலம் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன. கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடா... மேலும் பார்க்க