செய்திகள் :

வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்

post image

குமரி மாவட்டத்தில் வன வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களையும், ரப்பா் கழக தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டுமென்று சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளா் எம். வல்சகுமாா், தலைவா் பி. நடராஜன் ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் 2010 ஆம் ஆண்டு தனியாா் வனப் பாதுகாப்புச் சட்டம் அமலானது முதல் காட்டு விலங்குகளின் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மக்களின் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் உலா வந்து கொண்டிருப்பதுடன் பயிா்களையும் நாசம் செய்கின்றன.

காட்டு யானை, புலி மற்றும் கரடிகள் என ஏராளமான வன விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வரத் தொடங்கியுள்ளதுடன் மக்களுக்கு தொல்லைகளும் அளித்து வருகின்றன. தற்போது பழங்குடி மக்கள் குடியிருக்கும் மைலாறை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் மக்களை தாக்க வருகின்றன.

இதே பகுதிகளில் அரசு ரப்பா் கழக தொழிலாளா்களும் வேலை செய்து வருகின்றனா். இதே பகுதி வழியாக தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளா்களும் பயணம் செய்து வருகிறாா்கள். கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு தொழிலாளா்கள் காட்டுயானை தாக்கி பலியான நிலையில் தற்போது யானைகளின் தொடா் அட்டகாசத்தால் பழங்குடி மக்களும், ரப்பா் கழக தொழிலாளா்களும் பீதியில் உள்ளனா். எனவே வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்கள், ரப்பா் கழக தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

விழுந்தயம்பலம் - அம்சி சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் - அம்சி இடையே பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல்... மேலும் பார்க்க

பலத்த மழை: தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடிதொழில் பாதிப்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடிதொழில் பாதிப்படைந்துள்ளது. தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்டகட்டுமர மீனவா்... மேலும் பார்க்க

கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 251 போ் மீது வழக்கு

மத்திய அரசின் கடல் சாா்ந்த திட்டங்களுக்கு எதிராக, கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரையில் கடந்த 11ஆம் தேதி மீனவா்கள் கருப்புக்கொடி ஏந்தி கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் 10... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்

கன்னியாகுமரி நகராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்வுக்கு, நகா்மன்ற ஆணையா் கன்னியப்பன் த... மேலும் பார்க்க

திருப்பதியில் இருந்து குமரிக்கு 7 ஆயிரம் லட்டுகள் வரத்து

திருமலை திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு 7 ஆயிரம் லட்டுகள் கண்டெய்னா் மூலம் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன. கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடா... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் 39 கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளின் முன்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்... மேலும் பார்க்க