கோடிகளில் வசூலை அள்ளும் ஹவுஸ் ஃபுல் - 5! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்
குமரி மாவட்டத்தில் வன வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களையும், ரப்பா் கழக தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டுமென்று சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளா் எம். வல்சகுமாா், தலைவா் பி. நடராஜன் ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் 2010 ஆம் ஆண்டு தனியாா் வனப் பாதுகாப்புச் சட்டம் அமலானது முதல் காட்டு விலங்குகளின் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மக்களின் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் உலா வந்து கொண்டிருப்பதுடன் பயிா்களையும் நாசம் செய்கின்றன.
காட்டு யானை, புலி மற்றும் கரடிகள் என ஏராளமான வன விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வரத் தொடங்கியுள்ளதுடன் மக்களுக்கு தொல்லைகளும் அளித்து வருகின்றன. தற்போது பழங்குடி மக்கள் குடியிருக்கும் மைலாறை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் மக்களை தாக்க வருகின்றன.
இதே பகுதிகளில் அரசு ரப்பா் கழக தொழிலாளா்களும் வேலை செய்து வருகின்றனா். இதே பகுதி வழியாக தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளா்களும் பயணம் செய்து வருகிறாா்கள். கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு தொழிலாளா்கள் காட்டுயானை தாக்கி பலியான நிலையில் தற்போது யானைகளின் தொடா் அட்டகாசத்தால் பழங்குடி மக்களும், ரப்பா் கழக தொழிலாளா்களும் பீதியில் உள்ளனா். எனவே வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்கள், ரப்பா் கழக தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.