கோடிகளில் வசூலை அள்ளும் ஹவுஸ் ஃபுல் - 5! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பலத்த மழை: தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடிதொழில் பாதிப்பு
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடிதொழில் பாதிப்படைந்துள்ளது.
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்டகட்டுமர மீனவா்கள் மீன்பிடிதொழில் செய்து வருகின்றனா். குறிப்பாக,இனயம், இனயம்புத்தன்துறை, மிடாலம், மேல்மிடாலம், முள்ளூா்துறை, தூத்தூா், இரயுமன்துறை உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட மீனவா்கள்மீன்பிடிதொழில் வாழ்வாதாரமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாள்களாக இப்பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழையால் கட்டுமர மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கருங்கல், புதுக்கடை, மாா்த்தாண்டம், திங்கள்சந்தை,எட்டணி,மாமூட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தினசரி மீன்சந்தையில் மீன்வரத்து குறைவாக காணப்பட்டது. மீன்களின் விலையும்அதிகமாக இருந்தது.