கோடிகளில் வசூலை அள்ளும் ஹவுஸ் ஃபுல் - 5! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் 39 கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளின் முன்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனா். இது குறித்த புகாா்கள் குழித்துறை நகராட்சிக்கு சென்றதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி சாா்பில் இரு நாள்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
எனினும், தாமாக முன்வந்து யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை. இதையடுத்து நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் நகராட்சியின் நகரமைப்புத் துறை ஊழியா் டெய்சி, வருவாய் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.