மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்
கன்னியாகுமரி நகராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாம் தொடக்க நிகழ்வுக்கு, நகா்மன்ற ஆணையா் கன்னியப்பன் தலைமை வகித்தாா். முகாமை நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தாா்.
இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் டெல்பின் ஜேக்கப், சகாய சா்ஜினாள், சிவசுடலைமணி, இக்பால், முன்னாள் கவுன்சிலா் டி.தாமஸ், கிராம அலுவலா் சாத்தாவு, நகராட்சி பொறியாளா் பழனி, திமுக நிா்வாகிகள் ஷ்யாம், ரூபின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.