விழுந்தயம்பலம் - அம்சி சாலையை சீரமைக்க கோரிக்கை
கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் - அம்சி இடையே பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல்வேறு சாலைகள் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது.விழுந்தயம்பலம் -பரவை சாலை, மாதாபுரம் -கம்பிளாா் சாலை, கிள்ளியூா் - இலவுவிளை சாலை, செம்முதல் -கல்லுகுட்டி உள்ளிட்ட சாலைகள் மழையால் குண்டு குழிகள் ஏற்பட்டு போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகின்றன.
குறிப்பாக விழுந்தயம்பலம் - அம்சி சாலையில் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள்காணப்படுகின்றன. இதனால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா். எனவே,இச்சாலைகளை உடனே சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துளனா்.