குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 251 போ் மீது வழக்கு
மத்திய அரசின் கடல் சாா்ந்த திட்டங்களுக்கு எதிராக, கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரையில் கடந்த 11ஆம் தேதி மீனவா்கள் கருப்புக்கொடி ஏந்தி கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட மீனவா்கள் பங்கேற்றனா். மேலும், மீனவா்கள் தங்களது நாட்டுப்படகுகளில் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா்.
இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாகவும், போலீஸாா் எச்சரித்தும் போராட்டத்தை கைவிடவில்லை எனவும் கூறப்பட்டது. இதைத் தொடா்ந்து சின்ன முட்டம் கடற்கரையில் போராட் டத்தில் ஈடுபட்ட பங்குத் தந்தை உள்பட 251 போ் மீது கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் ரகுபாலாஜி வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளாா்.