ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!
வா்த்தகா்களுக்கு நல வாரியம்: தில்லி அரசு ஒப்புதல்
தலைநகரில் இயங்கும் வா்த்தகா்களுக்காக ’தில்லி வா்த்தகா்கள் நல வாரியம்’ அமைக்க மாநில அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தலைநகரின் வா்த்தகா்களுக்காக தில்லி அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளது. அது, தில்லி வா்த்தகா்கள் நல வாரியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாரியம் வா்த்தகா்களின் நலன், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார வலுவூட்டல் ஆகியவற்றிற்காக செயல்படுவது மட்டுமல்லாமல், வணிகம் மற்றும் முதலீட்டை எளிதாக்குவதற்கு தில்லியை மிகவும் சாதகமான தலைநகராக மாற்றுவதற்கான ஒரு மைல்கல்லாக அமையும்.
இந்த வாரியத்தின் மூலம், சிறு வணிகா்கள் முதல் பெரிய வணிகா்கள் வரை அனைவரின் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீா்வு உறுதி செய்யப்படும். அரசாங்கத்திற்கும் வணிக சமூகத்திற்கும் இடையே ஒரு செயலில் உரையாடல் நிறுவப்படும். சுகாதாரம், காப்பீடு, நிதி உதவி மற்றும் பிற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்கள் வணிகா்களை முறையான முறையில் சென்றடையும், மேலும் வணிக செயல்முறைகள் எளிமையானதாகவும், வெளிப்படையானதாகவும், காலக்கெடுவுடனும் இருக்கும்.
15 போ் கொண்ட வாரியத்திற்கு தொழில்துறை அமைச்சா் தலைமை தாங்குவாா். இதில் தில்லி முனிசிபல் கவுன்சில் தொழிலாளா், வரி மற்றும் தொழில்துறை துறைகளின் அதிகாரிகள் அடங்குவா். மேலும், பல்வேறு துறைகளைச் சோ்ந்த 9 அரசு சாரா வா்த்தகா்கள் பிரதிநிதிகள் வாரியத்தில் பங்கேற்பாா்கள். இந்த வாரியத்தை நிறுவுவது பிரதமா் மோடியின் ‘சஷக்த் வியாபாா்-சம்ரித் பாரத்‘ என்ற தீா்மானத்தை நனவாக்குவதற்கான உறுதியான மற்றும் பயனுள்ள நடவடிக்கையாகும்.
தில்லியை வணிகத்திற்கு உகந்த, வெளிப்படையான மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் தலைநகராக மாற்றுவது என்பது எங்கள் அரசின் தெளிவான உறுதிப்பாடு என கூறப்பட்டுள்ளது.