செய்திகள் :

விஏஓ வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் திருட்டு

post image

கரூா் தெற்கு காந்திகிராமத்தில் கிராம நிா்வாக அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் தெற்கு காந்திகிராமம் கே.கே.நகா் முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் திலீபன்(36). இவா், கரூா் மாவட்டம், சின்னதாராபுரத்தை அடுத்துள்ள அணைப்பாளையத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.

இவரது மனைவி மதனகாா்த்திகா(30). இவா் வெள்ளியணை சாா்-பதிவாளராக பணியாற்றி வருகிறாா்.

இவா்கள் இருவரும் திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளனா். பின்னா் செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 37 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திலீபன் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை காவல்நிலைய ஆய்வாளா் முத்துக்குமாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகிறாா்.

மேலும் கைரேகை நிபுணா்களும் சம்பவ இடத்துக்குச் சென்று திருடா்களின் கைரேகையை பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறு: தம்பி உள்பட 2 பேரை கத்தியால் குத்தியவா் கைது

நொய்யல் அருகே சொத்துத் தகராறில் தம்பியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் பழைய காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராமு (65).... மேலும் பார்க்க

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகள் பறிமுதல்: 10 போ் கைது

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 10 பேரையும் கைது செய்தனா். கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூா் மாவட்டம், காகித... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்: மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளப்பட்டியில் இருளில் மூழ்கிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ள... மேலும் பார்க்க