செய்திகள் :

விகடன் இணையதள முடக்கம்: ``அதிகாரத்தின் வெட்கக்கேடான அத்துமீறல்" - Editors Guild of India கண்டனம்

post image

அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் 20 மணி நேரத்துக்கும் மேலாக கை, கால்களில் விலங்கிடப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனர். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இதுகுறித்து எதுவும் பேசியதாக தெரியவில்லை. இதை விமர்சித்து விகடன் வலைப்பக்கத்தில் கார்ட்டூன் ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க அரசு, எந்த முன்னறிவிப்புமின்றி, விகடன் வலைப்பக்கத்தை முடக்கியிருக்கிறது. மத்திய அரசின் இந்த செயல்பாடு இந்திய ஊடகவியலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அமெரிக்கா அராஜகம்!

கருத்துரிமை, ஊடகச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் வந்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் Editors Guild of India அமைப்பு மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ``பிரதமரை சித்தரிக்கும் ஒரு கார்ட்டூனை வெளியிட்டதற்காக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால், எந்தவொரு உரிய நடைமுறையும் இல்லாமல், தமிழ் பத்திரிகை இணையதளமான Vikatan.com சமீபத்தில் முடக்கப்பட்டதில் இந்தியப் பத்திரிக்கைகள் ஆசிரியர் சங்கம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. பத்திரிக்கைகளில் வரும் கார்ட்டூன்கள் எப்போதும் ஒரு சட்டபூர்வமான வழிமுறையாகவே இருந்து வருகிறது. ஆனால், அதற்காக விகடன் வலைத்தளத்தை திடீரென முடக்குவது அதிகாரிகளின், அதிகாரத்தின் வெட்கக்கேடான அத்துமீறலாகும்.

Editors Guild of India

படைப்பின் பின்னணியில் உள்ள கார்ட்டூனிஸ்ட் சமூக ஊடகங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு, கொலை மிரட்டல்கள்கள் அனுப்பப்படுவதை அறிந்து வேதனையடைகிறோம். ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவரின் புகாரின் பேரில், எந்தவித முன்னறிவிப்புகள் இல்லாமல், ஆனந்த விகடனுக்கு - நியாயமான விசாரணைக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

வலைப்பக்கம் தன்னிச்சையாக முடக்கப்பட்டதற்குப் பின்னரே உரிய நடைமுறை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த முழு நிகழ்வும் அடாவடித்தனத்தையே வெளிப்படுத்துகிறது. நாட்டில் ஊடக சுதந்திரம் குறித்த கவலைகள் வளர்ந்து வருகிறது. வலைத்தளத்தை முடக்குவது வெளிப்படைத்தன்மையை மதிக்கும் இந்தியாவின் ஜனநாயக மரபுகளுக்கு இழுக்கு." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Udhayanidhi Stalin: ``யார் அரசியல் செய்வது?'' -மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உதயநிதி ஆதங்கம்!

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது இ... மேலும் பார்க்க

``உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்; இந்த விளையாட்டு எங்களிடம் செல்லாது'' - நடிகர் பிரகாஷ்ராஜ்

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு மத்திய பா.ஜ.க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தன் எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

UP: ``ஆங்கிலம் அதிகாரத்தை அடையும் ஆயுதம்'' - மாணவர்களிடம் ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆங்கில மொழியின் மதிப்பையும் எடுத்து... மேலும் பார்க்க

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலில், 78 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந... மேலும் பார்க்க

வம்பிழுத்த அண்ணாமலை - உலக டிரெண்டிங்கில் GET OUT MODI | Delhi CM | Udhayanidhi DMK | Imperfect Show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* Delhi CM - மூத்த தலைவர்களை ஓரங்கட்டி விட்டு, ரேகா குப்தா டெல்லி முதல்வரானது எப்படி? * டெல்லி முதல்வர் பதவியேற்பு!* Kumbh Mela: ``அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்பனை ஏன்?" -ரயில்... மேலும் பார்க்க