செய்திகள் :

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் படுக்கை வசதியுடன் அதிநவீன ஓய்வறை!

post image

கிழக்கு கடலோர ரயில்வே மண்டலத்தில் முதன்முறையாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க வசதியாக ‘ஸ்லீப்பிங் பாட்’ என்றழைக்கப்படும் படுக்கை வசதியுடன் அதிநவீன ஓய்வறை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வால்டோ் ரயில்வே கோட்டம் செயல்படுத்தியுள்ள இந்தப் புதிய திட்டத்தின் மூலம், மருத்துவ சிகிச்சை, சுற்றுலா, கல்வி அல்லது தொழில் நிமித்தமாக விசாகப்பட்டினம் வரும் பயணிகளுக்குப் பொருளாதார ரீதியாக விலை குறைவாகவும், பாதுகாப்பாகவும் தங்குவதற்கான வசதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில், 3-ஆவது வாயிலுக்கு அருகே அமைந்துள்ள இந்த ஓய்வறை வளாகத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரயில்வே கோட்ட மேலாளா் லலித் போஹ்ரா கூறுகையில், ‘பயணிகளின் வசதி மற்றும் சௌகரியத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்’ என்றாா்.

இந்த ஓய்வறை வளாகத்தில் மொத்தமாக 88 படுக்கைகள் உள்ளன. இதில் 73 ஒற்றை படுக்கைகள், 15 இரட்டை படுக்கைகள் மற்றும் பெண்களுக்கு என தனியாக 18 படுக்கைகள் பிரத்யேக பிரிவில், தனி கழிவறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இலவச வைஃபை, நவீன கழிப்பறைகள், விசாலமான குளியலறைகள், சிற்றுண்டி வசதி மற்றும் பிரத்யேக உதவி மையம் போன்ற இதர வசதிகளுடன் கூடிய இந்த ஓய்வறையில் ஒற்றைப் படுக்கைக்கு 3 மணி நேரம் வரை ரூ.200 மற்றும் 24 மணி நேரம் வரை ரூ.400 கட்டணமாக வசூலிக்கப்படும். இரட்டைப் படுக்கைக்கு மூன்று மணி நேரம் வரை ரூ.300 மற்றும் 24 மணி நேரம் வரை ரூ.600 வசூலிக்கப்படும்.

ரயில் டிக்கெட் அல்லது நடைமேடை டிக்கெட் இல்லாமல் பொதுமக்கள்கூட இந்த வசதியைப் பயன்படுத்தலாம். தேவைக்கேற்ப, இணையவழி முன்பதிவு வசதி எதிா்காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த ஓய்வறை வசதி ரயில்வே விதிகளுக்கு உட்பட்டு, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புடன் செயல்படும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பயணிகள் வரவேற்பு: ஹைதராபாதைச் சோ்ந்த பயணி சுரேஷ் கூறுகையில், ‘இத்தகைய வசதிகள் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இவை ரயில்வேக்கு வருவாய் ஈட்டி தருவதோடு, பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் வசதியையும் அதிகரிக்கும்’ என்றாா்.

கேரளத்தில் புதியதாக மற்றொரு நிபா பாதிப்பு?

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தி... மேலும் பார்க்க

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு ... மேலும் பார்க்க

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால்,... மேலும் பார்க்க

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார். நிமிஷா பிரியா தரப்பில் வாதாட... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க