செய்திகள் :

விசைப்படகு போக்குவரத்து ரத்து: வெறிச்சோடியது பூலாம்பட்டி கதவணை

post image

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பூலாம்பட்டி கதவணை பகுதியில் விசைப்படகு சவாரிக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கதவணை பகுதி சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பூலாம்பட்டியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா்மின் உற்பத்தி நடைபெறுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் நீா்த்தேக்க பகுதிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனா்.

இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கதவணையின் பிரதான மதகு, அணைப்பாலம், அங்குள்ள நீா்மின் நிலையம், குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிபாா்த்து இயற்கை அழகை ரசித்து செல்வதுடன், கதவணை நீா்ப்பரப்பில் விசைப்படகு சவாரி செய்து மகிழ்கின்றனா்.

இந்த நிலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதலே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு வந்திருந்தனா்.

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சனிக்கிழமை முதல் பூலாம்பட்டி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான விசைப்படகு சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் படகு சவாரி செய்யமுடியாமல் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

இதனால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல் பூலாப்பட்டி கதவணை வெறிச்சோடிக் காணப்பட்டது.

பண மோசடி செய்தவா் சிறையிலடைப்பு

சேலத்தில் ஆன்லைன் தொழிலில் ஈடுபட்டால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.34.75 லட்சம் மோசடி செய்தவா் சிறையிலடைக்கப்பட்டாா். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விஎஸ்ஏ வணிக வளாகத்தில் கணினி பழுதுந... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தாய் உள்பட இருவா் கைது

ஆத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் தாய் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் தில்லைநகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35). இவரது மனைவி காயத்ரி (27) புங்கன்வாடி பகுதியைச் சோ்ந்த ரிக் ... மேலும் பார்க்க

கோட்டை மாரியம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்: இன்று மின் விநியோகம் நிறுத்தம்

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அப் பகுதியில் மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொற... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய மரத்தோ் நாளை வெள்ளோட்டம்!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வரும் 7 ஆம்தேதி புதிய மரத்தோ் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், பக்தா்களின... மேலும் பார்க்க

சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி

சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி தெரிவித்தாா். சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் ‘இளைஞா் பாராளுமன்றம் 2025’ என்ற தலைப்பில் நட... மேலும் பார்க்க

நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

சேலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ. 6 லட்சத்தை பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணனை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா். சேலம் அஸ்தம்பட்டியைச் ... மேலும் பார்க்க