செய்திகள் :

விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

post image

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக விடியோ பதிவிட்ட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கராச்சியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் ரஃப்தார் எனும் டிஜிட்டல் செய்தி நிறுவனத்தின் உரிமையாளருமான ஃபர்ஹான் மாலிக் என்பவர் மீது, அவரது செய்தி நிறுவனத்தின் சேனலில் முக்கிய அதிகாரிகளைக் குறிப்பிட்டு அரசுக்கு எதிரான விடியோக்களை பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் 20 கராச்சியிலுள்ள அவரது இல்லத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் இன்று (மார்ச் 25) கராச்சி நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மாலிக் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதன் விசாரணையின் போது, அவர் அரசுக்கு எதிராக பதிவிட்ட விடியோக்களை குறிப்பிட்டுக் காட்டுமாறு அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

பின்னர், இந்த விசாரணையைத் தொடர்ந்து அவருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது ஜாமின் மனு மீது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த சனா தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி இயக்குநரான ஃபர்ஹான் மாலிக் மீது மின்னணு குற்றத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட அவர் நான்கு நாள்கள் விசாரணைக்காக மத்திய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும், ஃபர்ஹான் மாலிக் மற்றும் பலூச் யாக்ஜெஹ்தி ஆணையம் எனும் மனித உரிமை அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாகிஸ்தானின் ஊடகங்களும் ஆர்வலர்களும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை: முதல்வர்

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க

துருக்கி மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ! விடியோ வைரல்!

துருக்கியில் நாடு தழுவிய மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ வேடமணிந்த ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

செக் குடியரசு நாட்டில் சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சீனாவைச் சேர்ந்த எம்போசாட் என்ற நிறுவனம் கிழக்கு செக்கியா மாகாணத்தின் வல்கோஸ் என்ற கிராமத்தில் செயற்கைக்கோள் டிஷ் பொ... மேலும் பார்க்க

ஊர் ஊராகச் சென்று மக்களைத் தாக்கும் ஒற்றை யானை! ஒரே நாளில் 4 பேர் பலி!

ஜார்க்கண்டு மாநிலத்தில் மதம் பிடித்த ஒற்றை யானையின் தாக்குதலில் 12 மணி நேரத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். கும்லா மற்றும் சிம்டேகா ஆகிய மாவட்டங்களில் தனது கூட்டத்தை விட்டு பிரிந்ததாகக் கருதப்படும் காட்ட... மேலும் பார்க்க

திரைப்படம், நாடகம் மூலம் தீவிரவாதத்தை எதிர்க்கும் பாகிஸ்தான்!

தீவிரவாதத்தை திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் எதிர்க்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களின் பொது மற்றும் ராணுவத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் அந்நாட்டு பிரதமர... மேலும் பார்க்க