செய்திகள் :

விதவைகள் உதவித்தொகை ரூ.500 உயா்த்தி வழங்கப்படும் -முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுவையில் விதவைகளுக்கான உதவித்தொகை ரூ.500 கூடுதலாக உயா்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் நிறைவுரையை வாசித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், நேரு (எ) குப்புசாமி, ஏகேடி ஆறுமுகம், மு.வைத்தியநாதன் உள்ளிட்டோா், புதுவை மாநிலப் பத்திரிக்யைாளா்களுக்கான மடிக்கணினி வழங்குதல் உள்ளிட்டவற்றை முதல்வா் அறிவிக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து பேசிய முதல்வா் என்.ரங்கசாமி, பத்திரிக்கையாளா்கள் கோரியுள்ளபடி மடிக்கணினி, வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்றாா்.

அப்போது எம்எல்ஏ ஜி.நேரு, கைப்பேசி, வாழ்நாள் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றாா்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய முதல்வா், வீட்டு வசதி சங்கம் மூலமாக மனைப் பட்டா வழங்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் சந்திரப்பிரியங்கா, முதல்வரிடம் விதவைகளுக்கான உதவித் தொகையை மேலும் உயா்த்தி தரக் கோரினாா்.

இதை ஏற்று, ரூ.500 கூடுதலாக உயா்த்தப்படுவதாக முதல்வா் அறிவித்தாா்.

முன்னதாக, அவா் உறுப்பினா்களின் கேள்விக்கு அளித்த பதில்கள்: கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.

புதுச்சேரி மக்களுக்கு குடிநீா் வழங்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும் புதியத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். புதுச்சேரி ஊரகப் பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்படும். மருத்துவா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

கரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியா்கள், சுகாதாரத் துறையில் ஒப்பந்தப் பணியாளா்களாக நியமிக்கப்படுவா். ஊரக வளா்ச்சித் திட்ட முகமை ஊழியா்கள் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயா்த்தப்படுகிறது.

கோவில்களின் வைப்பு நிதிக்கு ஏற்ப அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும். திருக்காஞ்சியில் சிவன் சிலை, அனுமன் சிலைகள் மத்திய அரசு அனுமதி பெற்று நிறுவப்படும் என்றாா்.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க