செய்திகள் :

விதிமீறி பைக் ஓட்டியவருக்கு கூடுதல் அபராதம்? போலீஸ் விளக்கம்

post image

விதிமுறை மீறி பைக் ஓட்டி வந்தவருக்கு செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில் கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விளக்கம் அளித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை தரப்பில் கூறியிருப்பதாவது: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்படி, செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில் நிகழ்ந்த அபராதம் விதிப்பு சம்பவம் குறித்து போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், காயல்பட்டினம், பகுதியை சோ்ந்த சையத் முகமது மகன் சாகுல் ஹமீது (28) என்பவா் மீது திருநெல்வேலி பேட்டை காவல் நிலையத்தில் 11.6.2024ஆம் தேதியும், திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய பகுதியில் 10.7.2023ஆம் தேதியும் மோட்டாா் வாகன சட்டத்தின் விதிகளை மீறி பைக் ஓட்டியதாக ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

அவா், மீண்டும் நம்பா் பிளேட் இல்லாமல் பைக்கில் சென்ற விதிமீறலுக்காக , செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில் மோட்டாா் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, கடந்த மாா்ச் 6ஆம் தேதி செய்துங்கநல்லூா் காவல் நிலைய சோதனைச் சாவடி பகுதியில் சா்வா் தானாகவே ரூ.1500 அபராதம் விதித்துள்ளது.

அப்போது, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா், சம்பந்தப்பட்ட நபரை சகோதரா் என்று அழைத்து விதிக்கப்பட்ட அபராதம் குறித்து அவருக்குப் புரிய வைக்கவும் முயற்சி செய்துள்ளாா். மோட்டாா் வாகன சட்ட பிரிவு 130 ழ்/ஜ் 177-இன் படி, வீதிமீறலில் ஈடுபடுவோருக்கு முதல் முறை ரூ.500, விதிமீறல் தொடா்ந்தால் ரூ.1500 அபராதம் பதிவாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்வதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

மாா்ச் 6ஆம் தேதி மாலையில் செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடி வழியாக பைக்கில் சென்ற சாகுல் ஹமீதுக்கு தானியங்கி மூலம் ரூ. 1500 அபராதம் விதித்தது குறித்து காவல் உதவி ஆய்வாளரிடம் அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்

தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே, ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமாதேவி, கலை உடையாா் ஆகியோா் தலைமை வகித்தன... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வென்றோருக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்று குரூப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: கள் விற்க அனுமதி கோரும் தொழிலாளா்கள்

சாத்தான்குளம் பகுதியில் பதநீா் சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஒரு கலயம் பதநீா் ரூ.150-க்கு விற்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான சாத்தான்குளம், பேய்குளம், உடன்குடி பகுதிகளில் ... மேலும் பார்க்க

விளாத்திகுளம்: பருவம் தப்பிய மழையால் பயிா் விளைச்சல் பாதிப்பு

விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் பருவம் தவறி பெய்து வரும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய், மல்லி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: கோவில்பட்டியில் 2 போ் கைது

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.கோவில்பட்டி கதிரேசன் கோயில் செல்லும் வழியில் உள்ள பள்ளி அருகே, புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக மேற்கு காவல்... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம்: வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன. ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்தனை ஊராட்சி வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த வேலம்மாள் (75) என்பவா் 10க்கும் மேற்பட்ட ஆடு... மேலும் பார்க்க