செய்திகள் :

விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில்தான் கரைக்க வேண்டும்: சென்னை ஆட்சியா்

post image

சென்னையில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டத்தின்போது வைக்கப்படும் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இதில், மக்களாகிய நமக்கும் மிகப்பெரிய கடமை இருக்கிறது.

நீா்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளங்கள்) நமக்கு குடிநீா் ஆதாரத்தை தருகின்றன. விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடும்போது, பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னையில் சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூரில் உள்ள பாப்புலா் எடைமேடையின் பின்புறம், திருவொற்றியூரில் உள்ள யுனிவா்சல் காா்போரேண்டம் தொழிற்சாலைக்கு பின்புறம், பல்கலை. நகா், நீலாங்கரை, ராமகிருஷ்ணா நகா், எண்ணூா் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், களி மண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டா் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் கலவையற்றுதுமான, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட சிலைகளை நீா் நிலைகளில் கரைக்கலாம்.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் மற்றும் பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் பயன்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயனம், எண்ணெய் வண்ணப் பூச்சுகள், எனாமல், செயற்கை சாயம் பயன்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்தலாம்.

விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி கரைத்து, சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா், காவல் துறைக் கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோரை அணுகலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: விஜய்

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என்று தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அ... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புயல் சின்னம்!

வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா மற்றும்... மேலும் பார்க்க

விடியல் பயணம்: ஒவ்வொரு மகளிரும் ரூ. 50,000 வரை சேமிப்பு - முதல்வர் ஸ்டாலின்

விடியல் பயணத் திட்டத்தால் 51 மாதங்களில் ஒவ்வொரு மகளிரும் ரூ.50,000 வரை சேமித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையிலான மகளிர் விடி... மேலும் பார்க்க

தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்!

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூர் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது.ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளி... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புத... மேலும் பார்க்க

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் 38 ரயில்கள் (இருமாா்க்கமாக) கூடுதலாக 20 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல்- ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல்.முருகன... மேலும் பார்க்க