மெட்ரோ விபத்து: 4 பொறியாளர்கள் பணிநீக்கம்! எல்&டி-க்கு ரூ. 1 கோடி அபராதம்!
விபத்தில் இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு இப்கோ இழப்பீடு
சாலை விபத்தில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு இப்போ காப்பீடு மூலம் ரூ. 2 லட்சம் இழப்பீடு புதன்கிழமை வழங்கப்பட்டது.
கூட்டுறவு உர நிறுவனமான இப்கோ நிறுவனம் 2022-ஆம் ஆண்டு விவசாயிகள் வழக்கமாக பயன்படுத்தும் 45 கிலோ யூரியா மூட்டை மற்றும் 50 கிலோ டிஏபி-க்கு மாற்றாக அதே அளவு பயன் அளிக்கும் திறன் கொண்ட நானோ யூரியா மற்றும் நானோ டிஏபி உரங்களை அறிமுகப்படுத்தியது.
இந்த உரங்கள் இலை வழியாக தெளிக்கும்போது மண் வளத்தைப் பாதிக்காமல் அதிக அளவு மகசூல் பெற உதவி செய்கிறது. இந்தப் புதிய தலைமுறை உரங்களை ஊக்குவிப்பதற்காக இப்கோ நிறுவனம் சங்கடஹரன் பீமா யோஜனா என்ற பெயரில் இலவச விபத்து காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நானோ உரங்கள் வாங்கும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் இலவச விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு 20 பாட்டில்கள் வரை ரூ. 2 லட்சம் விபத்துக் காப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னா் கும்பகோணம் இரண்டாம் கட்டளை பகுதியைச் சோ்ந்த விவசாயி கருணாகரன் 20 நானோ யூரியா பாட்டில்களை வாங்கி வயல்களில் பயன்படுத்தி வந்தாா். எதிா்பாராதவிதமாக கடந்த ஜனவரி 31-ஆம் தேதி சாலை விபத்தின் போது உயிரிழந்தாா். தற்போது அவரது குடும்பத்துக்கு அதிகபட்ச காப்பீட்டுத் தொகையான ரூ. 2 லட்சம் இப்கோ நிறுவனத்தின் சாா்பில் தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா, இப்கோ கள அலுவலா் சரவணன் முன்னிலையில் புதன்கிழமை வழங்கப்பட்டது.