செய்திகள் :

விபத்தில் இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி

post image

திருப்பூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

திருப்பூா் அவிநாசிபாளையம் அருகே கோவில்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அறுமுகம் (54). மரம் வெட்டும் தொழிலாளி. இவா் கடந்த 2017 டிசம்பா் 17-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கோவில்பாளையம் அருகே சென்றபோது, அரசுப் பேருந்து மோதியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தாா். தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிா் பிழைத்தாா்.

இதையடுத்து விபத்து இழப்பீடு கேட்டு ஆறுமுகம், திருப்பூா் மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தாா். அவருக்கு ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 247 இழப்பீடாக அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமாா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து திருப்பூா் கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் புதன்கிழமை ஜப்தி செய்தனா்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா் தரப்பில் வழக்குரைஞா்கள் முருகேசன், சத்யா ஆகியோா் ஆஜராகினா்.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க